search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    செஞ்சிருவன்.... தனுஷின் `மாரி-2 பட வேலைகள் ஆரம்பம்
    X

    செஞ்சிருவன்.... தனுஷின் `மாரி-2' பட வேலைகள் ஆரம்பம்

    தனுஷ் நடிப்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியாகிய `மாரி' படத்தின் அடுத்த பாகத்திற்கான வேலைகள் தொடங்கி இருக்கின்றன.
    சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள `வேலையில்லா பட்டதாரி 2' படம் வருகிற ஜுலை 28-ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. தனுஷ் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் `வடசென்னை' படத்திலும், `ஃபகீர்' என்ற ஹாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார்.

    கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் `எனை நோக்கி பாயும் தோட்டா' படம் இறுதி கட்டத்தை எட்டியிருப்பதால் விரைவில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் `மாரி-2' படத்திற்கான வேலைகளை தொடங்கிவிட்டதாக படத்தின் இயக்குநர் பாலாஜி மோகன் அவரது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். `மாரி' படத்தின் முதல் பாகம் ரிலீசாகி நேற்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி இந்த அறிவிப்பை பாலாஜி மோகன் வெளியிட்டிருக்கிறார்.

    `மாரி-2' படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.
    Next Story
    ×