என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
திரையுலகினர் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்: நாசர் பேச்சு
Byமாலை மலர்26 Jun 2017 5:01 AM GMT (Updated: 26 Jun 2017 5:01 AM GMT)
திரையுலகினர் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்று பட விழாவில் நடிகர் சங்க தலைவர் நாசர் பேசியுள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
அதர்வா, ரெஜினா ஜோடியாக நடித்துள்ள படம் ‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்.’ சூரி, ஐஸ்வர்யா ராஜேஷ், பிரணிதா, அதிதி ஆகியோரும் நடித்துள்ளனர். ஓடம் இளவரசு டைரக்டு செய்துள்ளார். இமான் இசையமைத்துள்ளார். அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரித்து உள்ளார்.
இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது. விழாவில் நடிகர் சங்க தலைவர் நாசர் கலந்து கொண்டு பேசியதாவது:-
“தமிழ் பட உலகில் திறமையானவர்கள் இருக்கிறார்கள். உலகின் தலை சிறந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் நம்மிடம் இருக்கிறார். சிறந்த நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்களும் தமிழ் பட உலகில் இருக்கிறார்கள். சிறந்த தயாரிப்பாளர்களும் உள்ளனர். சினிமா எல்லாதரப்பு மக்களை யும் சென்று அடைகிறது.
தமிழ் சினிமா கலைஞர்கள் தங்கள் திறமைகளை உலகறியச் செய்ய வேண்டும். அதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். நமக்குள் வீண் சண்டை, சச்சரவுகள் வேண்டாம். அரசியல் பாகுபாடுகளும் வேண்டாம். தமிழ் திரையுலகினர் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
மறைந்த நடிகர் முரளி மகன் அதர்வா இந்த படத்தில் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். முரளி சிறந்த நடிகர். கடைசிவரை சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அவரைப்போல் அதர்வாவும் சிறந்த நடிகராக உயர வேண்டும்.”
இவ்வாறு நாசர் பேசினார்.
விழாவில் டி.சிவா தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கும் ‘பார்ட்டி’ படம் பற்றிய முதல் தோற்றமும் வெளியிடப்பட்டது.
இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது. விழாவில் நடிகர் சங்க தலைவர் நாசர் கலந்து கொண்டு பேசியதாவது:-
“தமிழ் பட உலகில் திறமையானவர்கள் இருக்கிறார்கள். உலகின் தலை சிறந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் நம்மிடம் இருக்கிறார். சிறந்த நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்களும் தமிழ் பட உலகில் இருக்கிறார்கள். சிறந்த தயாரிப்பாளர்களும் உள்ளனர். சினிமா எல்லாதரப்பு மக்களை யும் சென்று அடைகிறது.
தமிழ் சினிமா கலைஞர்கள் தங்கள் திறமைகளை உலகறியச் செய்ய வேண்டும். அதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். நமக்குள் வீண் சண்டை, சச்சரவுகள் வேண்டாம். அரசியல் பாகுபாடுகளும் வேண்டாம். தமிழ் திரையுலகினர் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
மறைந்த நடிகர் முரளி மகன் அதர்வா இந்த படத்தில் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். முரளி சிறந்த நடிகர். கடைசிவரை சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அவரைப்போல் அதர்வாவும் சிறந்த நடிகராக உயர வேண்டும்.”
இவ்வாறு நாசர் பேசினார்.
விழாவில் டி.சிவா தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கும் ‘பார்ட்டி’ படம் பற்றிய முதல் தோற்றமும் வெளியிடப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X