search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    சூர்யா நடிக்கவிருந்த படத்தில் துல்கர் சல்மான்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
    X

    சூர்யா நடிக்கவிருந்த படத்தில் துல்கர் சல்மான்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

    சூர்யா நடிக்கவிருந்த படத்தில் தற்போது துல்கர் ச்லமான் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. அது என்ன படம் என்பதை கீழே பார்ப்போம்.
    1950-70-களில் திரையுலக ரசிகர்களை தனது நடிப்பால் கட்டிப்போட்டவர் நடிகை சாவித்ரி. "நடிகையர் திலகம்" என போற்றப்படும் இவரது வாழ்க்கை வரலாற்றை தெலுங்கு திரையுலகின் பிரபல இயக்குநர் நாக் அஸ்வின் படமாக எடுக்க உள்ளார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் சமந்தா கதாநாயகிகளாக ஒப்பந்தமாகி உள்ளனர். இதில் கீர்த்தி சுரேஷ், சாவித்ரி வேடத்தில் நடிக்கிறார்.

    மற்றொரு கதாநாயகியான சமந்தா, பத்திரிக்கையாளராக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஜமுனா கதாபாத்திரத்தில் நடிக்க அனுஷ்கா உடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.



    தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் தயாராக உள்ள இப்படத்தில் "காதல் மன்னன்" ஜெமினி கணேசன் கதாபாத்திரத்தில், `வாயை மூடி பேசவும்' படத்தில் நடித்த துல்கர் சல்மான் ஒப்பந்தமாகி உள்ளதாக இப்படத்தை தயாரிக்க உள்ள வைஜெயந்தி பிலிம்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முன்னதாக இப்படத்தில் சூர்யா நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் தேதி பிரச்சனையால் இப்படத்தில் சூர்யா நடிக்க முடியாத சூழல் ஏற்பட்டதாக பின்னர் அறிவிக்கப்பட்டது.

    இப்படத்திற்கு தெலுங்கில் ‘மகாநதி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனை வருகிற மே 8-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கின்றனர். தமிழில் இப்படத்திற்கு `நடிகையர் திலகம்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.



    இப்படத்திற்கு இசையமைக்க இளையராஜாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்த நிலையில், மிக்கி ஜே.மேயர் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×