search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    கன்னட மக்களிடம் வருத்தம் தெரிவித்த சத்யராஜுக்கு, கமல்ஹாசன் பாராட்டு
    X

    கன்னட மக்களிடம் வருத்தம் தெரிவித்த சத்யராஜுக்கு, கமல்ஹாசன் பாராட்டு

    கன்னட மக்களிடம் வருத்தம் தெரிவித்த சத்யராஜுக்கு, கமல்ஹாசன் டுவிட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார். அதுகுறித்த செய்தியை விரிவாக பார்ப்போம்...
    ‘பாகுபலி-2’ திரைப்படம் வருகிற 28-ந்தேதி 'ரிலீஸ்' ஆகிறது.

    9 வருடங்களுக்கு முன்பு சத்யராஜ் கன்னடர்களுக்கு எதிராக பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால், ‘பாகுபலி-2’ படத்தை கர்நாடகத்தில் வெளியிட விடமாட்டோம் என்று சில கன்னட அமைப்புகள் அறிவித்தன.

    இதையடுத்து சத்யராஜ் 9 வருடங்களுக்கு முன்பு நான் காவிரி நீர் பிரச்சனை தொடர்பாக நடந்த கண்டன கூட்டத்தில் பேசினேன். அந்த கருத்துக்கள் கன்னட மக்களின் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன். ‘பாகுபலி-2’ படத்தை திரையிட அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று வீடியோ பேச்சு மூலம் விளக்கம் அளித்து இருந்தார்.

    அதில், ஒரு நடிகனாக இருப்பதைவிட, எந்தவித மூட நம்பிக்கையும் இல்லாத ஒரு தமிழனாக இருப்பதும், இறப்பதும்தான் எனக்கு பெருமை மகிழ்ச்சி என்றும் தெரிவித்திருந்தார்.


    இதற்கு கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

    இக்கட்டான சூழ்நிலையிலும் பகுத்தறிவை பின்பற்றி வருவதாக சத்யராஜ் கூறி உள்ளார்.. மன்னிப்பு கேட்கிறவன் பெரிய மனிதன். சத்யராஜுக்கு எனது வாழ்த்துக்கள்.

    இவ்வாறு அதில் கூறி இருக்கிறார்.

    இதற்கு பதில் அளித்துள்ள சத்யராஜ், 'கமலின் பாராட்டுக்கு நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.
    Next Story
    ×