என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
பிரம்மாண்ட நிகழ்ச்சியில் ‘பாகுபலி 2’ பாடல்களை வெளியிடும் ரஜினி, விஜய்?
Byமாலை மலர்27 March 2017 7:10 AM GMT (Updated: 27 March 2017 7:10 AM GMT)
சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ள பாகுபலி 2 படத்தின் தமிழ் பாடல்களை நடிகர் ரஜினிகாந்த், விஜய் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்ப்போம்.
2017-ஆம் ஆண்டின் பிரம்மாண்ட படங்களுள் ஒன்றான ‘பாகுபலி 2’ ஏப்ரல் 28-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது. எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தின் ‘டிரைலர்’ ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இது உலக அளவில் அதிகமாக பார்க்கப்பட்ட 7-வது டிரைலர் என்ற சாதனையை படைத்திருக்கிறது.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் ‘பாகுபலி-2’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டது. இதனையடுத்து, தெலுங்கு பதிப்புக்கான பாடல் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. அதனைத்தொடர்ந்து தமிழில் ஏப்ரல் 8-ந்தேதி பாடல் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.
சென்னை நேரு ஸ்டேடியத்தில் மிகப்பெரிய அளவில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ள இந்த விழாவில் சூப்பர்ஸ்டார் ரஜினி மற்றும் விஜய் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு படத்தின் பாடல்களை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விழாவில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாள படகலைஞர்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். ‘பாகுபலி-2’ இந்தியா முழுவதும் பல்வேறு மொழிகளில் 6 ஆயிரத்து 500 தியேட்டர்களில் திரையிடப்படுவது குறி்ப்பிடத்தக்கது.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் ‘பாகுபலி-2’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டது. இதனையடுத்து, தெலுங்கு பதிப்புக்கான பாடல் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. அதனைத்தொடர்ந்து தமிழில் ஏப்ரல் 8-ந்தேதி பாடல் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.
சென்னை நேரு ஸ்டேடியத்தில் மிகப்பெரிய அளவில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ள இந்த விழாவில் சூப்பர்ஸ்டார் ரஜினி மற்றும் விஜய் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு படத்தின் பாடல்களை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விழாவில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாள படகலைஞர்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். ‘பாகுபலி-2’ இந்தியா முழுவதும் பல்வேறு மொழிகளில் 6 ஆயிரத்து 500 தியேட்டர்களில் திரையிடப்படுவது குறி்ப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X