search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    நயன்தாரா படத்துக்காக சென்சார் போர்டை விமர்சித்த விக்னேஷ் சிவன்
    X

    நயன்தாரா படத்துக்காக சென்சார் போர்டை விமர்சித்த விக்னேஷ் சிவன்

    விக்னேஷ் சிவன், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘டோரா’ படத்துக்காக தணிக்கை குழுவை விமர்சித்துள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
    நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘டோரா’ படத்திற்கு தணிக்கை குழு ‘ஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளது. திகில் காட்சிகள் படத்தில் அதிகம் இடம்பிடித்துள்ளதால் தணிக்கை குழுவினர் இப்படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் அளித்துள்ளதாக விளக்கம் அளித்துள்ளனர்.

    இந்நிலையில், ‘டோரா’ படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் அளித்ததற்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் தணிக்கை குழுவை மறைமுகமாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ‘டோரா’ படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ். துருவங்கள் பதினாறு, மாநகரம் படங்களுக்கு ‘யுஏ’ சான்றிதழ். ஆனால், சமீபத்தில் வெளிவந்த சில படங்களுக்கு மட்டும் ‘யு’ சான்றிதழ். சென்சார் போர்டு மீதான காதல் தினம் தினம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது என்று கூறியுள்ளார்.



    நயன்தாராவும்-விக்னேஷ்சிவனும் காதலர்களாக வலம் வந்துகொண்டிருப்பதாக கோலிவுட் ஒரு செய்தி பரவி வருகிறது. இருவரும் ஒரே வீட்டில் குடித்தனம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இரண்டு பேரும் தாங்கள் காதலர்கள்தான் என்பதை இதுவரை வெளிப்படையாக கூறவில்லை. இருப்பினும், இதுபோன்ற சம்பவங்கள்தான் அவர்களின் நெருக்கத்தை அவ்வப்போது சுட்டிக்காட்டி வருகிறது.
    Next Story
    ×