search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    10 கோடி பார்வையாளர்களை பெற்று பாகுபலி-2 புதிய சாதனை
    X

    10 கோடி பார்வையாளர்களை பெற்று 'பாகுபலி-2' புதிய சாதனை

    எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா நடிப்பில் உருவாகி இருக்கும் `பாகுபலி 2' அதிக பார்வையாளர்களை பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. சாதனை குறித்த விரிவான தகவலை கீழே பார்ப்போம்.
    2017-ஆம் ஆண்டின் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான `பாகுபலி 2' குறித்து ஒவ்வொரு நாளும் ஸ்வாரஸ்ய தகவல்கள் வந்து  கொண்டே இருகின்றன. அந்த வகையில் பாகுபலி படமும் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. எஸ்.எஸ். ராஜமவுலி  இயக்கத்தில் உருவான `பாகுபலி'  படத்தின் இரண்டாவது பாகமாக உருவாகியுள்ள `பாகுபலி 2' வரும் ஏப்ரல் 28-ஆம் ரசிகர்களுக்கு  விருந்தளிக்க உள்ளது.

    பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், நாசர் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில்  வெளியாகிய இப்படத்தின் டிரெய்லர் தற்போது 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.  மேலும் இந்தியாவில் அதிகம்  பார்க்கப்பட்ட மற்றும் அதிகம் விரும்பப்பட்ட படத்தின் டிரெய்லர் என்ற சாதனையைும் நிகழ்த்தி உள்ளது.



    தெலுங்கில் மட்டும் இதுவரை 35 லட்சம் பார்வையாளர்களும், இந்தியில் 30 லட்சம் பார்வையார்களும், தமிழில் 6 லட்சம் பேரும்,  மலையாளத்தில் 1 லட்சம் பேரும் டிரெய்லரை கண்டுகளித்துள்ளனர். இந்தியில் டப்பிங் செய்யப்படும் ஒரு படம் அதிக  பார்வையாளர்களை பெற்றிருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

    ரிலீசுக்கு முன்பே வணிக ரீதியிலும் பாகுபலி 2 சாதனை படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் தமிழக திரையரங்கு  உரிமையை கே புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ராஜாராஜன் வாங்கி உள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் என 4  மொழிகளில் சுமார் 6,500 திரையரங்குகளில் வெளியாகி சாதனை படைக்க உள்ளது.



    தென்னிந்திய மொழித் திரைப்படம் ஒன்று ஐமேக்ஸ் வீடியோ வடிவில் வருவது இதுவே முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×