search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    ஜாமீனில் விடுதலையான மதன் கமிஷனர் அலுவலகத்தில் ஆஜர்
    X

    ஜாமீனில் விடுதலையான மதன் கமிஷனர் அலுவலகத்தில் ஆஜர்

    ரூ.90 கோடி மோசடி வழக்கில் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்ட பட அதிபர் மதன் கமிஷனர் அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்து போட்டார். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரியில் ‘சீட்’ வாங்கித் தருவதாக மாணவ-மாணவிகளிடம் ரூ.90 கோடி மோசடி நடந்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

    இந்த வழக்கில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 22-ந் தேதியன்று படஅதிபர் மதன் கைது செய்யப்பட்டார். அவருக்கு ஜாமீன் வழங்கி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் படஅதிபர் மதன் நேற்று முன்தினம் ஜாமீனில் விடுதலை ஆனார்.

    நேற்று அவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை கமிஷனர் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் ஆஜராகி அவர் கையெழுத்து போட்டார். கமிஷனர் அலுவலகத்தின் பின்பக்க வாசல் வழியாக வந்து கையெழுத்து போட்டுவிட்டு சென்றுவிட்டார்.
    Next Story
    ×