என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
இந்தி, தெலுங்கில் ரீமேக்காகும் ‘துருவங்கள் பதினாறு’
Byமாலை மலர்20 Jan 2017 7:52 AM GMT (Updated: 20 Jan 2017 7:52 AM GMT)
புதுமுக இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கிய ‘துருவங்கள் பதினாறு’ படம் இந்தி மற்றும் தெலுங்கில் ரீமேக்காக உள்ளது. இதுகுறித்த தகவலை கீழே பார்க்கலாம்.
புதுமுக இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கிய ‘துருவங்கள் பதினாறு’ படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. “ 21 வயதே ஆன இந்த இயக்குனர் படத்தில் முதலில் நடிக்க தயங்கினேன்” என்று இந்த படத்தின் நாயகன் ரகுமான் கூறி இருந்தார்.
இப்போது அந்த இயக்குனரை நம்பிய ரகுமானுக்கும் பாராட்டுகள் குவிகின்றன. இதற்கு காரணமான இளம் இயக்குனர் கார்த்திக் நரேனை திரைஉலகில் பாராட்டாதவர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு, மூத்த டைரக்டர்களும் சினிமா பிரபலங்களும் பாராட்டி வருகிறார்க்ள.
ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் படத்தை இது வரை யாரும் சொல்லாத திரைக்கதையில் சொன்னது,கார்த்திக்நரேனுக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்திருக்கிறது. இந்த நிலையில் ‘துருவங்கள் பதினாறு’ படம் இந்தியிலும், தெலுங்கிலும் ‘ரீமேக்‘ ஆக இருக்கிறது. முன்னணி நிறுவனங்கள் இந்த படத்தின் ரீமேக் உரிமம் கேட்டு அணுகி உள்ளன. இது குறித்து கூறிய கார்த்திக் நரேன்...
“ துருவங்கள் பதினாறு படத்தின் தெலுங்கு, இந்தி ரீமேக், உரிமை கேட்டு சில நிறுவனங்கள் அணுகி இருக்கின்றன. அதையும் சிலர் என்னையே இயக்கச் சொல்கிறார்கள். இதற்கான ஒப்பந்தம் இன்னும் கையெழுத்தாகவில்லை. நான் இப்போது அடுத்த படத்துக்கு தயாராகிவிட்டேன். அதற்கான நடிகர், நடிகைகள் தேர்வில் இருக்கிறேன். ஜூலை மாதம் புதிய படம் தொடங்கும்” என்றார்.
விரைவில் ‘துருவங்கள் பதினாறு’ இந்தி, தெலுங்கு ‘ரீமேக்‘ தொடர்பான ஒப்பந்தங்க்ள கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போது அந்த இயக்குனரை நம்பிய ரகுமானுக்கும் பாராட்டுகள் குவிகின்றன. இதற்கு காரணமான இளம் இயக்குனர் கார்த்திக் நரேனை திரைஉலகில் பாராட்டாதவர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு, மூத்த டைரக்டர்களும் சினிமா பிரபலங்களும் பாராட்டி வருகிறார்க்ள.
ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் படத்தை இது வரை யாரும் சொல்லாத திரைக்கதையில் சொன்னது,கார்த்திக்நரேனுக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்திருக்கிறது. இந்த நிலையில் ‘துருவங்கள் பதினாறு’ படம் இந்தியிலும், தெலுங்கிலும் ‘ரீமேக்‘ ஆக இருக்கிறது. முன்னணி நிறுவனங்கள் இந்த படத்தின் ரீமேக் உரிமம் கேட்டு அணுகி உள்ளன. இது குறித்து கூறிய கார்த்திக் நரேன்...
“ துருவங்கள் பதினாறு படத்தின் தெலுங்கு, இந்தி ரீமேக், உரிமை கேட்டு சில நிறுவனங்கள் அணுகி இருக்கின்றன. அதையும் சிலர் என்னையே இயக்கச் சொல்கிறார்கள். இதற்கான ஒப்பந்தம் இன்னும் கையெழுத்தாகவில்லை. நான் இப்போது அடுத்த படத்துக்கு தயாராகிவிட்டேன். அதற்கான நடிகர், நடிகைகள் தேர்வில் இருக்கிறேன். ஜூலை மாதம் புதிய படம் தொடங்கும்” என்றார்.
விரைவில் ‘துருவங்கள் பதினாறு’ இந்தி, தெலுங்கு ‘ரீமேக்‘ தொடர்பான ஒப்பந்தங்க்ள கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X