search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    கங்கை அமரனுக்கு ‘ஹரிவராசனம்’ விருது
    X

    கங்கை அமரனுக்கு ‘ஹரிவராசனம்’ விருது

    சபரிமலையில் வரும் 14-ந்தேதி பிரபல இசையமைப்பாளர், பாடகர் என பன்முக திறமை வாய்ந்த கங்கை அமரனுக்கு ‘ஹரிவராசனம்’ விருது வழங்கப்படுகிறது.
    மத நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டை காப்பதில் சிறந்த பங்களிப்பை நல்குவோருக்கு கேரள அரசு ஆண்டுதோறும் ‘ஹரிவராசனம்’ விருது வழங்கி கவுரவித்து வருகிறது. சபரிமலை அய்யப்பன் கோவில் ஆதரவில் வழங்கப்படும் இந்த விருது ரூ.1 லட்சம் பணமும், ஒரு சான்றிதழும் அடங்கியதாகும்.

    இந்த ஆண்டுக்கான ஹரிவராசனம் விருதுக்கு தமிழகத்தை சேர்ந்த பிரபல இசையமைப்பாளர், பாடகர் என பன்முக திறமை வாய்ந்த கங்கை அமரன் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். சபரிமலையில் 14-ந்தேதி (சனிக்கிழமை) நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியில் கேரள சுற்றுலா மற்றும் தேவசம்போர்டு மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன், கங்கை அமரனுக்கு இந்த விருதை வழங்குகிறார்.

    தேசிய ஒருமைப்பாடு மற்றும் மத நல்லிணக்கத்துக்கு கங்கை அமரன் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரித்து இந்த விருது வழங்கப்படுவதாக கேரள அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
    Next Story
    ×