என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
ஐஸ்வர்யாராயை குலுங்க குலுங்க சிரிக்க வைத்த அமிதாப்பச்சன்
Byமாலை மலர்6 Jan 2017 9:47 AM GMT (Updated: 6 Jan 2017 9:47 AM GMT)
விழாவில் தனது மருமகள் ஐஸ்வர்யா ராயை நடிகர் அமிதாப்பச்சன் சிரிக்க வைத்துள்ளார். அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
‘ஏ தில் ஹை முஷ்கில்’ படத்தில் ஐஸ்வர்யாராய் ரன்பிர் கபூருடன் நெருக்கமாக நடித்தார். இதனால் அமிதாப்பச்சன் அவரது மருமகள் ஐஸ்வர்யாராயுடன் கோபமாக இருக்கிறார் என்று கூறப்பட்டது.
ஆனால் அதில் அந்த வித உண்மையும் இல்லை என்பதை, சமீபத்தில் மும்பையில் நடந்த ஒரு விழா ரசிகர்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது.
அந்த சம்பவம் இது தான்...மும்பையில் சமீபத்தில் ‘ஸ்டார் டஸ்ட்’ விருது வழங்கும் விழா நடந்தது. இதில் அமிதாப்பச்சன், ஜெயாபச்சன், ஐஸ்வர்யாராய், ஷாருக்கான், பிரியங்கா சோப்ரா, கரண்ஜோஹர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விழாவில் ஐஸ்வர்யா ராயும், அமிதாப்பச்சனும் அருகருகே உள்ள இருக்கையில் அமர்ந்து இருந்தார்கள். அப்போது அமிதாப்பச்சன் அடித்த ஜோக்கை கேட்ட ஐஸ்வர்யா தன்னை அடக்கிக்கொள்ள முடியாமல் குலுங்கி குலுங்கி சிரித்தார். அமிதாப்பச்சன் தொடர்ந்து ஜோக் அடிக்கவே முகத்தை மூடிக்கொண்டு நீண்ட நேரம் விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருந்தார். அமிதாப்பச்சன் பின் வரிசையில் இருந்த கரன்ஜோஹரையும் பார்த்து ஜோக் அடிக்கவே ஐஸ்வர்யா ராய் சிரிப்பை அடிக்கவே முடியாமல் தவித்தார்.
சமீபத்தில் கணவர் அபிஷேக்பச்சன், மகள்ஆரத்யா ஆகியோருடன் ஐஸ்வர்யாராய் வெளிநாடு சென்று புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தார். இதனால் ஐஸ்வர்யாராயுடன் அமிதாப் குடும்பத்தினர் கோபம் என்ற வதந்தி புஸ்வாணம் ஆகி இருக்கிறது.
ஆனால் அதில் அந்த வித உண்மையும் இல்லை என்பதை, சமீபத்தில் மும்பையில் நடந்த ஒரு விழா ரசிகர்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது.
அந்த சம்பவம் இது தான்...மும்பையில் சமீபத்தில் ‘ஸ்டார் டஸ்ட்’ விருது வழங்கும் விழா நடந்தது. இதில் அமிதாப்பச்சன், ஜெயாபச்சன், ஐஸ்வர்யாராய், ஷாருக்கான், பிரியங்கா சோப்ரா, கரண்ஜோஹர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விழாவில் ஐஸ்வர்யா ராயும், அமிதாப்பச்சனும் அருகருகே உள்ள இருக்கையில் அமர்ந்து இருந்தார்கள். அப்போது அமிதாப்பச்சன் அடித்த ஜோக்கை கேட்ட ஐஸ்வர்யா தன்னை அடக்கிக்கொள்ள முடியாமல் குலுங்கி குலுங்கி சிரித்தார். அமிதாப்பச்சன் தொடர்ந்து ஜோக் அடிக்கவே முகத்தை மூடிக்கொண்டு நீண்ட நேரம் விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருந்தார். அமிதாப்பச்சன் பின் வரிசையில் இருந்த கரன்ஜோஹரையும் பார்த்து ஜோக் அடிக்கவே ஐஸ்வர்யா ராய் சிரிப்பை அடிக்கவே முடியாமல் தவித்தார்.
சமீபத்தில் கணவர் அபிஷேக்பச்சன், மகள்ஆரத்யா ஆகியோருடன் ஐஸ்வர்யாராய் வெளிநாடு சென்று புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தார். இதனால் ஐஸ்வர்யாராயுடன் அமிதாப் குடும்பத்தினர் கோபம் என்ற வதந்தி புஸ்வாணம் ஆகி இருக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X