search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    கணவர் மற்றும் குழந்தைகளுடன் நடிகை ரம்பா
    X
    கணவர் மற்றும் குழந்தைகளுடன் நடிகை ரம்பா

    கணவரை பிரிந்துவிட்டாரா ரம்பா? திரையுலகத்தில் பரபரப்பு

    ரம்பா கணவரை பிரிந்து தனியாக வாழ்வதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
    90-களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரம்பா. ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து அனைவர் மனதையும் கொள்ளை கொண்டவர். தமிழ் மட்டுமில்லாது, தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், பெங்காலி, போஜ்பூரி உள்ளிட்ட மொழிகளிலும் ரம்பா நடித்துள்ளார்.

    இந்நிலையில், இவருக்கும் கனடாவை சேர்ந்த தொழிலதிபரான இந்திரன் பத்மநாபனுக்கும் கடந்த 2010-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை தவிர்த்துவிட்ட ரம்பா, சில ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் தலையை காட்டினார்.



    இந்திரன் பத்மநாபன் - ரம்பா தம்பதியருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், ரம்பா கடந்த சில வருடங்களாக கணவரை பிரிந்து வாழ்வதாக இணையதளங்களில் செய்திகள் உலாவின. தற்போது தனது கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் ரம்பா மனுதாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    அதில், கடந்த சில வருடங்களாக தான் கணவரை பிரிந்து வாழ்வதாகவும், இந்த நிலையில் தான் குழந்தைகளை பார்த்துக் கொள்வது சிரமமாக இருப்பதாகவும், குடும்ப வாழ்க்கையை தற்போது புரிந்து கொண்டுள்ளதால், கருணை அடிப்படையில் தனது கணவருடன் சேர்த்து வைக்குமாறு கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த மனு மீதான விசாரணை டிசம்பர் 3-ந் தேதி விசாரணைக்கு வரும் என்றும் கூறுப்படுகிறது.
    Next Story
    ×