என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
சவுந்தர்யாவுக்கு தனுஷை பரிந்துரை செய்த ரஜினி
Byமாலை மலர்24 Oct 2016 12:05 PM GMT (Updated: 24 Oct 2016 12:05 PM GMT)
சவுந்தர்யா படத்தில் தனுஷையே ஹீரோவாக்கலாம் என ரஜினி பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்..
ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா ‘கோச்சடையான்’ என்ற அனிமேஷன் படத்தை மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் படமாக்கியிருந்தார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு புதிய படம் ஒன்றை இயக்க முடிவு செய்துள்ளார். இப்படத்திற்கு நடிகர் தனுஷ் கதை எழுதியுள்ளார்.
இப்படத்திற்கான நடிகர், நடிகையர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ஹீரோவாக நடிக்க மலையாள நடிகர் மோகன்லாலில் மகன் பிரணவ்-விடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். ஏற்கெனவே, பிரணவ்-க்கு மலையாளத்தில் பல்வேறு படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தபோதுகூட அதில் எல்லாம் அவர் நடிக்க மறுத்துவிட்டார்.
இந்நிலையில், சவுந்தர்யாவின் படத்தில் அவர் நடிப்பாரா? என்பது கேள்விக்குறியாகவே இருந்து வந்தது. இந்நிலையில், தற்போது, சவுந்தர்யா படத்திலும் பிரணவ் நடிக்க மறுத்துவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. பிரணவ் தற்போது மலையாளத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படம்தான் அவர் அறிமுகமாகும் முதல் படம்.
முதல் படம் என்பதால் அந்த படத்திலேயே பிரணவ் தனது முழு கவனத்தையும் செலுத்த வேண்டி இருக்கிறதாம். அதுதவிர, அவருக்கு நடிப்பைவிட இயக்குனர் ஆவதற்குத்தான் விருப்பமாம். அதனாலேயே எந்த படவாய்ப்புகளையும் அவர் ஏற்கவில்லையாம். சவுந்தர்யா படத்திலும் நடிக்க மறுத்ததற்கு இதுதான் காரணம் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து, ரஜினியிடம் இந்த கதையை பற்றி விவாதித்துள்ளார் சவுந்தர்யா. தனுஷ் அமைத்துள்ள கதை, தனுஷுக்கே பொருத்தமாக இருக்கும் என்றும், அவரையே ஹீரோவாக நடிக்க வைக்கலாம் என்று சவுந்தர்யாவுக்கு ரஜினி பரிந்துரை செய்துள்ளாராம். எனினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
இப்படத்திற்கான நடிகர், நடிகையர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ஹீரோவாக நடிக்க மலையாள நடிகர் மோகன்லாலில் மகன் பிரணவ்-விடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். ஏற்கெனவே, பிரணவ்-க்கு மலையாளத்தில் பல்வேறு படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தபோதுகூட அதில் எல்லாம் அவர் நடிக்க மறுத்துவிட்டார்.
இந்நிலையில், சவுந்தர்யாவின் படத்தில் அவர் நடிப்பாரா? என்பது கேள்விக்குறியாகவே இருந்து வந்தது. இந்நிலையில், தற்போது, சவுந்தர்யா படத்திலும் பிரணவ் நடிக்க மறுத்துவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. பிரணவ் தற்போது மலையாளத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படம்தான் அவர் அறிமுகமாகும் முதல் படம்.
முதல் படம் என்பதால் அந்த படத்திலேயே பிரணவ் தனது முழு கவனத்தையும் செலுத்த வேண்டி இருக்கிறதாம். அதுதவிர, அவருக்கு நடிப்பைவிட இயக்குனர் ஆவதற்குத்தான் விருப்பமாம். அதனாலேயே எந்த படவாய்ப்புகளையும் அவர் ஏற்கவில்லையாம். சவுந்தர்யா படத்திலும் நடிக்க மறுத்ததற்கு இதுதான் காரணம் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து, ரஜினியிடம் இந்த கதையை பற்றி விவாதித்துள்ளார் சவுந்தர்யா. தனுஷ் அமைத்துள்ள கதை, தனுஷுக்கே பொருத்தமாக இருக்கும் என்றும், அவரையே ஹீரோவாக நடிக்க வைக்கலாம் என்று சவுந்தர்யாவுக்கு ரஜினி பரிந்துரை செய்துள்ளாராம். எனினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X