search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    கோவாவின் சர்வதேச பட விழாவில் திரையிட சூர்யா படங்கள் தேர்வு
    X

    கோவாவின் சர்வதேச பட விழாவில் திரையிட சூர்யா படங்கள் தேர்வு

    கோவாவில் நடைபெறும் சர்வதேச பட விழாவில் திரையிட நடிகர் சூர்யாவின் இரண்டு படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
    இந்திய அரசு சார்பில் அடுத்த மாதம் கோவாவில் சர்வதேச திரைப்பட விழா நடைபெறுகிறது. இதில் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிட 250 படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் 3 தமிழ்படங்கள். அவற்றில் ஒன்று மாதவன்-ரித்திகா சிங் நடித்த ‘இறுதிச்சுற்று’ .

    மற்ற இரண்டு படங்களும் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரித்தவை. அதில் ஒன்று பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான ‘பசங்க-2’ மற்றொன்று சூர்யா 3 வேடங்களில் நடித்த ‘24’. தனது தயாரிப்பில் நடிப்பில் திரைக்கு வந்த 2 படங்கள் கோவா சர்வதேச படவிழாவில் திரையிட தேர்வு ஆகி இருப்பதால் மகிழ்ந்து போன சூர்யா, இந்த விழாவில் பங்கேற்கவும் திட்டமிட்டுள்ளார்.

    சூர்யா தற்போது 'சிங்கம்' படத்தின் மூன்றாவது பாகமாக உருவாகி வரும் 'எஸ் 3' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். இப்படத்தின் டீசர் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×