என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
என்னைப் பற்றி என் மனைவிக்கு நன்றாகத் தெரியும்: ஷாருக்கான்
Byமாலை மலர்22 Oct 2016 10:09 AM GMT (Updated: 22 Oct 2016 10:09 AM GMT)
என்னைப்பற்றி என் மனைவிக்கு நன்கு தெரியும் என இந்தித் திரையுலகின் முன்னணி நடிகர் ஷாரூக்கான் தெரிவித்துள்ளார்.
இந்திப்பட உலகின் முன்னணி நடிகர் ஷாருக்கான். இப்போது ‘ரயீஸ்’, ‘டிஜயர் ஜிந்தகி’ உள்பட பல படங்களில் நடித்து வருகிறார். பெண்களுடன் இவருக்கு தொடர்பு இருப்பதாக அவ்வப்போது ‘கிசு கிசு’க்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் தன்னைப்பற்றி எழும் கிசு கிசுக்களுக்கு நடிகர் ஷாரூக்கான் விளக்கமளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் “நான் ஒரு நடிகன். சுமார் 20 வருடங்கள் இந்த துறையில் இருக்கிறேன். உலகின் மிக அழகான பெண்களுடன் நடித்திருக்கிறேன். நான் வெளிநாட்டிலும், என்னுடன் நடிக்கும் நடிகைகளுடனும் ரகசிய தொடர்பு வைத்துக் கொண்டதாக வதந்திகளை பரப்பினார்கள்.
இது போன்ற செய்திகள் எந்த விதத்திலும் என்னை பாதிக்காது. என் மனைவி கவுரியையும் பாதிக்காது. என்னைப் பற்றி என் மனைவிக்கு நன்றாக தெரியும். நான் என்னுடைய வேலையை தவிர வேறு எதையும் கவனிக்க எனக்கு நேரம் இல்லை என்பதை என் மனைவி அறிவார்.
எனக்கும் என் மனைவிக்கும் கருத்து வேறுபாடு வந்தால், அது எங்கள் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட முடியவில்லையே என்பதைப் பற்றியதாகத்தான் இருக்கும். எனவே கிசுகிசுக்களைப் பற்றி நான் கவலைப்படவேண்டியதில்லை” என்றார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் “நான் ஒரு நடிகன். சுமார் 20 வருடங்கள் இந்த துறையில் இருக்கிறேன். உலகின் மிக அழகான பெண்களுடன் நடித்திருக்கிறேன். நான் வெளிநாட்டிலும், என்னுடன் நடிக்கும் நடிகைகளுடனும் ரகசிய தொடர்பு வைத்துக் கொண்டதாக வதந்திகளை பரப்பினார்கள்.
இது போன்ற செய்திகள் எந்த விதத்திலும் என்னை பாதிக்காது. என் மனைவி கவுரியையும் பாதிக்காது. என்னைப் பற்றி என் மனைவிக்கு நன்றாக தெரியும். நான் என்னுடைய வேலையை தவிர வேறு எதையும் கவனிக்க எனக்கு நேரம் இல்லை என்பதை என் மனைவி அறிவார்.
எனக்கும் என் மனைவிக்கும் கருத்து வேறுபாடு வந்தால், அது எங்கள் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட முடியவில்லையே என்பதைப் பற்றியதாகத்தான் இருக்கும். எனவே கிசுகிசுக்களைப் பற்றி நான் கவலைப்படவேண்டியதில்லை” என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X