search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    பேய் படங்களில் இனி நடிக்க மாட்டேன்: திரிஷா
    X

    பேய் படங்களில் இனி நடிக்க மாட்டேன்: திரிஷா

    இனி மேல் பேய்படங்களில் நடிப்பதில்லை என்று முடிவு செய்திருக்கிறேன். ‘மோகினி’தான் நான் நடிக்கும் கடைசி பேய் படம் என திரிஷா கூறினார்.

    ‘அரண்மனை-2’ படத்தில் திரிஷா பேயாக நடித்தார். ‘நாயகி’ படத்திலும் பேய் வேடம் போட்டார். அடுத்து ‘மோகினி’ படம் திரைக்கு வர இருக்கிறது. ஒரு பெண்ணை சீரழித்தவர்களை, அவருடைய ஆவி தேடிச் சென்று பழிவாங்கும் கதை இது.

    ஆர். மாதேஷ் இயக்கும் இந்த படத்துக்கு விவேக் மெர்வின் இசை அமைக்கிறார். ஆர். பி. குருதேவ் ஒளிப்பதிவு செய்கிறார். மார்வெல் ஒர்த் புரொடெக்‌ஷன் சார்பில் எஸ். லட்சுமண்குமார் தயாரிக்கிறார்.

    இந்த படத்தில் திரிஷாவரும் தோற்றம் இப்போது வெளியிடப்பட்டுள்ளது. தொடர்ந்து பேய் படங்களில் நடிப்பது குறித்து திரிஷாவிடம் கேட்டபோது...

    “நான் இப்போது கதைகளை கேட்டு, எனது பாத்திரம் பிடித்திருந்தால் மட்டும் நடிக்கிறேன். எல்லா வேடங்களிலும் திறமையை காட்ட வேண்டும் என்பதற்காகவே பேய் படங்களில் நடிக்க ஆரம்பித்தேன். இப்போதுஅதில் நிறைவு கிடைத்துவிட்டது. இனி மேல் பேய்படங்களில் நடிப்பதில்லை என்று முடிவு செய்திருக்கிறேன். ‘மோகினி’தான் நான் நடிக்கும் கடைசி பேய் படம். நடிக்க வேண்டிய பாத்திரங்கள் நிறையஇருக்கின்றன.

    நான் முன்பு போல இல்லை. நல்ல கதை, வித்தியாசமான கதாபாத்திரம் என்றால் புதுமுக நடிகர்கள், புதிய இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறேன்” என்றார்.

    Next Story
    ×