என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
படப்பிடிப்பை முடித்த கையோடு வியாபாரத்தையும் முடித்த வெங்கட் பிரபு
Byமாலை மலர்21 Oct 2016 9:11 AM GMT (Updated: 21 Oct 2016 9:11 AM GMT)
வெங்கட் பிரபு தான் இயக்கி வந்த ‘சென்னை 600 0028’ படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பை முடித்த கையோடு வியாபாரத்தையும் முடித்துள்ளார். அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்..
வெங்கட் பிரபு இயக்கத்தில் முதன்முதலாக வெளிவந்த ‘சென்னை 600 028’ படத்தின் இரண்டாம் பாகத்தை 8 வருடங்களுக்கு பிறகு இயக்கி வருகிறார் வெங்கட் பிரபு. இப்படத்தை இயக்குவதோடு மட்டுமில்லாமல் பிளாக் டிக்கெட் கம்பெனி என்ற நிறுவனத்தின் மூலம் தயாரிக்கவும் செய்கிறார் வெங்கட்பிரபு.
‘சென்னை 600028’ முதல் பாகத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார்கள். கூடுதலாக வைபவ், மஹத் ஆகியோர் புதிதாக இணைந்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் மலேசியாவில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது.
இந்நிலையில், தற்போது இப்படத்தின் படப்பிடிப்பை படக்குழுவினர் நிறைவு செய்திருக்கின்றனர். கிரிக்கெட் வீரர் சேவாக்கின் பிறந்தநாளான நேற்றோடு இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்திருப்பது படத்திற்கு மேலும் சிறப்பு என்று படக்குழுவினர் பெருமை பொங்க கூறுகின்றனர்.
இப்படத்தை நவம்பர் 10-ஆம் தேதி வியாழக்கிழமையன்று உலகமெங்கும் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார் இயக்குனர் வெங்கட்பிரபு. இந்நிலையில் ‘சென்னை 28’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை அபிஷேக் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ரமேஷ் வாங்கியுள்ளார். பல முன்னணி படங்களுக்கு இந்நிறுவனம்தான் பைனான்ஸ் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
‘சென்னை 600028’ முதல் பாகத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார்கள். கூடுதலாக வைபவ், மஹத் ஆகியோர் புதிதாக இணைந்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் மலேசியாவில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது.
இந்நிலையில், தற்போது இப்படத்தின் படப்பிடிப்பை படக்குழுவினர் நிறைவு செய்திருக்கின்றனர். கிரிக்கெட் வீரர் சேவாக்கின் பிறந்தநாளான நேற்றோடு இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்திருப்பது படத்திற்கு மேலும் சிறப்பு என்று படக்குழுவினர் பெருமை பொங்க கூறுகின்றனர்.
இப்படத்தை நவம்பர் 10-ஆம் தேதி வியாழக்கிழமையன்று உலகமெங்கும் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார் இயக்குனர் வெங்கட்பிரபு. இந்நிலையில் ‘சென்னை 28’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை அபிஷேக் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ரமேஷ் வாங்கியுள்ளார். பல முன்னணி படங்களுக்கு இந்நிறுவனம்தான் பைனான்ஸ் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X