என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
நாளை சென்சாருக்கு செல்லும் ரெமோ
Byமாலை மலர்25 Sep 2016 7:02 AM GMT (Updated: 25 Sep 2016 7:02 AM GMT)
சிவகார்த்திகேயன் நடித்துள்ள ரெமோ படம் நாளை சென்சாருக்கு செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதுகுறித்து கீழே பார்ப்போம்..
சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் படம் ‘ரெமோ’. இப்படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். கீர்த்தி சுரேஷ் இரண்டாவது முறையாக சிவகார்த்திகேயனோடு ஜோடி சேர்ந்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், சவுண்ட் என்ஜினியர் ரசூல் பூக்குட்டி, ஹாலிவுட் மேக்கப் கலைஞர் சீன் பூட், இசையமைப்பாளர் அனிருத் என மிகப்பெரிய தொழில்நுட்ப கலைஞர்களும் இப்படத்தில் கைகோர்த்துள்ளனர்.
சமீபத்தில் இப்படத்தின் பாடல்களும், டிரைலரும் வெளிவந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், வரும் அக்டோபர் 7-ந் தேதி இப்படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அதற்கு முன்னதாக இப்படத்தின் பின்னணி இசைக்கோர்ப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில், தற்போது இப்படத்தின் பின்னணி இசைக்கோர்ப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதையடுத்து, நாளை இப்படத்தை தணிக்கை குழுவினருக்கு படக்குழுவினர் அனுப்ப உள்ளனர். நாளை அல்லது நாளை மறுநாள் இப்படத்திற்கு தணிக்கை குழுவினர் என்ன சான்றிதழ் வழங்குவார்கள் என்பது தெரிய வந்துவிடும்.
இப்படத்தை 24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் இப்படத்தின் பாடல்களும், டிரைலரும் வெளிவந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், வரும் அக்டோபர் 7-ந் தேதி இப்படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அதற்கு முன்னதாக இப்படத்தின் பின்னணி இசைக்கோர்ப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில், தற்போது இப்படத்தின் பின்னணி இசைக்கோர்ப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதையடுத்து, நாளை இப்படத்தை தணிக்கை குழுவினருக்கு படக்குழுவினர் அனுப்ப உள்ளனர். நாளை அல்லது நாளை மறுநாள் இப்படத்திற்கு தணிக்கை குழுவினர் என்ன சான்றிதழ் வழங்குவார்கள் என்பது தெரிய வந்துவிடும்.
இப்படத்தை 24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X