search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    அஜித் சார் எனக்கு வீடு வாங்கிக் கொடுத்தாரா? - அப்புக்குட்டி விளக்கம்
    X

    அஜித் சார் எனக்கு வீடு வாங்கிக் கொடுத்தாரா? - அப்புக்குட்டி விளக்கம்

    அப்புக்குட்டிக்கு அஜித் வீடு வாங்கிக் கொடுத்துள்ளதாக வெளிவந்த செய்திக்கு அப்புக்குட்டி விளக்கம் அளித்துள்ளார். அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்...
    ‘வெண்ணிலா கபடி குழு’ ‘வீரம்’, ‘வேதாளம்’ உள்ளிட்ட பல படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களிலும், ‘அழகர்சாமியின் குதிரை’, ‘மன்னாரு’ ஆகிய படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ள அப்புக்குட்டி என்ற சிவபாலன் தற்போது நாயகனாக நடித்துள்ள படம் ‘காகிதகப்பல்’.

    இப்படத்தின் ஆடியோ வெளியீடு சென்னையில் சமீபத்தில் நடந்தது. இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக கேரளா அருகே படப்பிடிப்பில் இருந்த அப்புக்குட்டி அவசர பயணமாக சென்னை வந்து கலந்துகொண்டார். விழாவில் அப்புக்குட்டி பேசும்போது,

    சமீபகாலமாக என்னைப் பற்றி தாறுமாறாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. அஜித் எனக்கு வீடு வாங்கித் தந்ததாக எழுதுகிறார்கள். பல படங்களில் நான் சம்பளம் வாங்காமலேயே நடிப்பதாகவும் எழுதுகிறார்கள். பணம், புகழ் இதற்காகத்தான் சினிமாவில் நடிக்கிறோம். பிறகு எப்படி சம்பளம் வாங்காமல் நடிப்பேன். நான் சம்பளம் வாங்காமல் நடிக்கிறேன் என்று சொன்னால், நிறைய பேர் சம்பளம் இல்லாமல் நடிப்பீர்களா? என்று வந்து நிற்பார்கள். எந்த படமாக இருந்தாலும் எனக்கான சம்பளத்தை வாங்கிக் கொண்டுதான் நடிக்கிறேன். அதுபோல் நான் சினிமாவில் சம்பாதித்துதான் சென்னையில் வீடு கட்டி வருகிறேன் என்றார்.

    இப்படத்தில் அப்புக்குட்டி கிராமத்தில் இருந்து சென்னை வந்து போராடி வெற்றி பெறுவராக நடிக்கிறார். இப்படத்தில் தனது நடிப்பை மாறுபட்ட கோணத்தில் வெளிப்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக டில்லிஜா என்ற புதுமுகம் நடிக்கிறார். எஸ்.சிவராமன் இப்படத்தை இயக்குகிறார். எவர்கிரீன் மூவிஸ் சார்பில் வி.ஏ.துரை தயாரித்துள்ளார். 
    Next Story
    ×