search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    என் வாழ்க்கை படகுக்கு நாகசைதன்யா தான் துடுப்பு: நடிகை சமந்தா
    X

    என் வாழ்க்கை படகுக்கு நாகசைதன்யா தான் துடுப்பு: நடிகை சமந்தா

    என் வாழ்க்கை என்னும் படகுக்கு நடிகர் நாகசைதன்யா தான் துடுப்பு என நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.
    தமிழ், தெலுங்கின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா-நாக சைதன்யா திருமணம் அடுத்த ஆண்டு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில் நடிகை சமந்தா முதல்முறையாக தனது காதலர் நாகசைதன்யா பற்றி மனம் திறந்து கூறியுள்ளார்.

    இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் “நான் காதலிப்பவர் யார் என்பதை அறிய ஆர்வம் காட்டுகிறார்கள். இதில் மறைப்பதற்கு எதுவும் இல்லை. நடிகர் நாகசைதன்யாவைத்தான் காதலிக்கிறேன். இரண்டு பேரின் பெற்றோரின் ஆசீர்வாதம் எங்களுக்கு இருக்கிறது. திருமண தேதியை குடும்பத்தினர் அறிவிப்பார்கள்.

    நான் தெலுங்கில் முதல் படத்தில் அறிமுகமான நாளில் இருந்தே நாகசைதன்யா எனக்கு நெருக்கமானவராகி விட்டார். 3 மாதங்களுக்கு முன்புதான் எங்கள் காதல் பற்றி உறவினர்களுக்கு தெரிய வந்தது. நாகசைதன்யாவிடம் எனக்கு பிடித்த வி‌ஷயங்கள் நிறைய உண்டு. குழப்பமாக இருந்த என் வாழ்க்கையை மாற்றி ஒரு நிலையான தன்மைக்கு கொண்டு வந்தது அவர்தான். ஒரு படகுக்கு துடுப்பு எப்படி முக்கியமோ அதுபோல் என்வாழ்க்கைக்கு அவர் முக்கியம்.

    சினிமாவை நேசிக்கும் ஒரு குடும்பத்திலேயே வாழ்க்கைப் படப்போவது மகிழ்ச்சியாக இருக்கிறது. திருமணத்துக்கு நிறைய நாட்கள் இருக்கிறது. எனக்கு தெரிந்தது நடிப்பு மட்டும்தான். திருமணத்துக்கு பிறகும் ரசிகர்கள் வேண்டாம் என்று சொல்லும் வரை நடிப்பேன்”.

    இவ்வாறு நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×