search icon
என் மலர்tooltip icon

    கார்

    • 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 109 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்துகிறது.
    • மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

    மஹிந்திரா நிறுவனம் தனது XUV300 மாடலுக்கு அதிகபட்சம் ரூ. 1 லட்சத்து 80 ஆயிரம் வரையிலான சலுகைகளை வழங்குகிறது. ஆண்டு இறுதியை முன்னிட்டு இது தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இவை கார்ப்பரேட் தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ் மற்றும் தள்ளுபடி வடிவில் வழங்கப்படுகின்றன.

    இந்திய சந்தையில் மஹிந்திரா XUV300 மாடலின் விலை ரூ. 7 லட்சத்து 99 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 13 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த கார் 1.2 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் மற்றும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என மூன்றுவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

     


    மஹிந்திரா XUV300 மாடலில் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், 7 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, ரிவர்ஸ் கேமரா, 1-டச் லேன் சேன்ஜ் இன்டிகேட்டர், குரூயிஸ் கண்ட்ரோல், எலெக்ட்ரிக் டெயில்கேட் ரிலீஸ் மற்றும் ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் போன்ற வசதிகள் வழங்கப்பட்டு உள்ளன.

    இந்த காரின் டாப் எண்ட் வேரியண்ட்களில் 6 ஏர்பேக் வழங்கப்படுகிறது. இதன் ஸ்டாண்டர்டு வெர்ஷனில் இரண்டு ஏர்பேக் வழக்கமாக வழங்கப்படுகிறது. இதில் உள்ள 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 109 ஹெச்.பி. பவர், 200 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    டர்போ பெட்ரோல் யூனிட் 129 ஹெச்.பி. பவர், 230 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. டீசல் என்ஜின் 115 ஹெச்.பி. பவர், 300 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இவற்றுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

    • ஹோண்டா சிட்டி போன்ற பிளாட்ஃபார்மிலேயே இந்த கார் உருவாக்கப்பட்டது.
    • இந்த கார் இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கார் மாடல்கள் இந்த ஆண்டு துவங்கியதில் இருந்தே தொடர்ச்சியாக அறிமுகம் செய்யப்பட்டன. இதில் முன்னணி பிரான்டுகள் துவங்கி, ஆடம்பர கார் நிறுவனங்களின் மாடல்கள் வரை பலதரப்பட்ட வாகனங்கள் இடம்பெற்றுள்ளன.

    அந்த வகையில், 2023 ஆண்டு இந்திய சந்தையில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகமான கார் மாடல்கள் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.


     

    ஹோண்டா எலிவேட்:

    காம்பேக்ட் எஸ்.யு.வி. பிரிவில் கவனம் செலுத்தும் நோக்கில் ஹோண்டா அறிமுகம் செய்த கார் மாடல் - ஹோண்டா எலிவேட். இந்த கார் மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா, ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், வோக்ஸ்வேகன் டைகுன் மற்றும் ஸ்கோடா குஷக் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகின்றன. ஹோண்டா சிட்டி போன்ற பிளாட்ஃபார்மிலேயே இந்த கார் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

     


    கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட்:

    கியா இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் எஸ்.யு.வி-யாக செல்டோஸ் மாடல் உள்ளது. இந்த காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் இந்த ஆண்டு அறிமுகமாகி பெரும் வரவேற்பை பெற்றது. புதிய 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின், ADAS அம்சங்கள் இந்த காரின் குறிப்பிடத்தக்க அம்சங்களாக இருக்கின்றன. இத்துடன் இந்த கார் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.


     

    டாடா நெக்சான் ஃபேஸ்லிஃப்ட்:

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது பிரபலமான நெக்சான் மாடலின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை அறிமுகம் செய்தது. நெக்சான் மட்டுமின்றி அதன் எலெக்ட்ரிக் வெர்ஷனான நெக்சான் EV மாடலும் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனில் அறிமுகம் செய்து டாடா நிறுவனம் அசத்தியது.

     


    ஹூண்டாய் வெர்னா & எக்ஸ்டர்:

    ஹூண்டாய் நிறுவனம் தனது ஆறாவது தலைமுறை வெர்னா மாடலை இந்த ஆண்டு அறிமுகம் செய்தது. ஹூண்டாயின் பாராமெட்ரிக் டிசைன் கொண்ட செடான் கார் என்ற பெருமையுடன் புதிய தலைமுறை வெர்னா மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதுபோன்ற டிசைன் இந்தியாவில் வேறு எந்த செடான் மாடலிலும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கார் இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    வெர்னாவை தொடர்ந்து ஹூண்டாய் அறிமுகம் செய்த மிகப்பெரிய மாடல் எக்ஸ்டர். இந்த கார் மூலம் ஹூண்டாய் நிறுவனம் மினி எஸ்.யு.வி. பிரிவில் களமிறங்கியுள்ளது. புதிய ஹூண்டாய் எக்ஸ்டர் மாடல் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின், 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 5 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.


     

    மாருதி சுசுகி ஃபிரான்க்ஸ்:

    நெக்சா பிரான்டில் அறிமுகமான முதல் காம்பேக்ட் எஸ்.யு.வி. என்ற பெருமையை ஃபிரான்க்ஸ் பெற்றது. மாருதி சுசுகியின் மிகப் பெரிய வெளியீடாக ஃபிரான்க்ஸ் அமைந்தது. இந்த மாடலில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் பூஸ்டர் ஜெட் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் CNG ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. 

    • மஹிந்திரா XUV400 மாடல் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
    • மஹிந்திரா XUV400 இருவித பேட்டரி பேக் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    மஹிந்திரா நிறுவனம் தனது ஒற்றை எலெக்ட்ரிக் கார் மாடல் XUV400-க்கு டிசம்பர் மாத சலுகையை அறிவித்து இருக்கிறது. அந்த வகையில் மஹிந்திரா XUV400 மாடலுக்கு ரூ. 4 லட்சம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடல் விலை ரூ. 16 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என்று துவங்குகிறது.

    இந்திய சந்தையில் மஹிந்திரா XUV400 மாடல் EC மற்றும் EL என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றுக்கு முறையே ரூ. 3 லட்சம் மற்றும் ரூ. 4 லட்சம் வரையிலான தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. இந்த தொகை வேரியண்ட், விற்பனையகம் மற்றும் ஸ்டாக் இருப்புக்கு ஏற்ப வேறுபடும். மேலும் இவை டிசம்பர் 31-ம் தேதி வரை மட்டுமே வழங்கப்படும்.

     


    மஹிந்திரா XUV400 மாடல்- 34.5 கிலோவாட் ஹவர் மற்றும் 39.4 கிலோவாட் ஹவர் என இருவித பேட்டரி பேக் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை முறையே 375 கிலோமீட்டர்கள் மற்றும் 456 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என சான்று பெற்று இருக்கிறது.

    • ஆலைகளில் கார் உற்பத்தி படிப்படியாக நிறுத்தப்பட்டது.
    • ஃபோர்டு ஆலையை டாடா மோட்டார்ஸ் விலைக்கு வாங்கியது.

    அமெரிக்காவைச் சேர்ந்த ஃபோர்டு நிறுவனம், இந்தியாவில் சென்னை மறைமலை நகர் மற்றும் குஜராத்தில் உள்ள சனந்த் என இரண்டு இடங்களில் தனது தொழிற்சாலையில் கார் தயாரித்து வந்தது. இந்தியாவில் ஃபோர்டு நிறுவனம் கடும் நஷ்டத்தை சந்தித்ததால், ஆலைகளில் கார் உற்பத்தி படிப்படியாக நிறுத்தப்பட்டது. இனிமேல் இந்தியாவில் உள்ள தங்களது இரண்டு தொழிற்சாலைகளிலும் கார்கள் தயாரிப்பதில்லை என்கிற முடிவுக்கு வந்தது ஃபோர்டு.

    சென்னை மறைமலை நகர் தொழிற்சாலையை ஒப்பிடுகையில், குஜராத்தில் உள்ள தொழிற்சாலை மிகவும் நவீனமானது. குஜராத் மாநிலம் சனந்தில் உள்ள ஃபோர்டு ஆலையை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 726 கோடி ரூபாய்க்கு வாங்கியது. மறைமலை நகரில் இருக்கிற ஆலையை வாங்க மஹிந்திரா நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தியது.

     


    எனினும், மஹிந்திரா மற்றும் ஃபோர்டு இடையே சுமூக முடிவு எட்டப்படவில்லை. இதனைத்தொடர்ந்து, ஜே.எஸ்.டபிள்யு. குழுமம் மற்றும் ஃபோர்டு இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்ட்டது. இந்த நிலையில், அதனையும் ஃபோர்டு நிறுவனம் ரத்து செய்தது.

    இந்நிலையில், சென்னை ஆலையை விற்பனை செய்ய ஃபோர்டு நிறுவனத்துக்கு திட்டம் இல்லை என்றும் ஆலையை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஃபோர்டு தொழிற்சாலையை, மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் ஆலையாக மாற்ற முடியுமா என்பதை ஆராய்வதற்காக ஃபோர்டு நிறுவனத்துடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

    தற்போது மக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்த தொடங்கியுள்ள காரணத்தால் இந்தியாவில் ஒரு ஆலையை ஏற்றுமதி தளமாக பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்கிறது ஃபோர்டு நிறுவனம். எனவே, இந்தியாவில் போர்ஃடு நிறுவனம் மீண்டும் போல்டாக செயல்பட உள்ளது.

    • டாடா எலெக்ட்ரிக் கார்களுக்கு சலுகைகள் அறிவிப்பு.
    • இம்மாத இறுதிவரை சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது. செலவீனங்கள் தொடர்ந்து அதிகரிப்பதாலும், பணவீக்கம் காரணமாகவும் விலை உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.

    விலை உயர்வு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அமலுக்கு வரவுள்ளது. இந்த நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டாடா டியாகோ EV மற்றும் டாடா டிகோர் EV மாடல்களுக்கு ரூ. 1.10 லட்சம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகிறது.

    இந்த சலுகைகள் டிசம்பர் 31-ம் தேதி அல்லது ஸ்டாக் இருக்கும் வரை வழங்கப்படுகிறது. டிகோர் EV காம்பேக்ட் செடான் மாடலுக்கு ரூ. 1 லட்சத்து 10 ஆயிரம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகிறது. இதில் ரூ. 50 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் எக்சேன்ஜ் போனஸ் வடிவில் ரூ. 50 ஆயிரமும், கார்ப்பரேட் போனஸ் ஆக ரூ. 10 ஆயிரமும் வழங்கப்படுகிறது.

     


    தற்போது டாடா டிகோர் EV மாடலின் விலை ரூ. 12 லட்சத்து 49 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று துவங்குகிறது. இந்த மாடலில் 26 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 315 கிலோமீட்டர்ள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது.

    டாடா டியாகோ EV எலெக்ட்ரிக் ஹேச்பேக் மாடலுக்கு அதிகபட்சம் ரூ. 77 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது. இதில் கிரீன் போனஸ் தொகையாக ரூ. 55 ஆயிரம் வழங்கப்படுகிறது. எக்சேன்ஜ் போனஸ் ஆக ரூ. 15 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. தற்போது இந்த மாடலின் விலை ரூ. 8 லட்சத்து 69 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று துவங்குகிறது.

    இந்திய சந்தையில் டாடா டியாகோ EV மாடல் மீடியம் ரேன்ஜ் மற்றும் லாங் ரேன்ஜ் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றில் முறையே 19.2 கிலோவாட் ஹவர் மற்றும் 24 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்படுகிறது. இவை முறையே 250 கிலோமீட்டர் மற்றும் 315 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகின்றன.

    • இந்த பலன்கள் ஒவ்வொரு விற்பனையாளரை பொருத்து வேறுபடும்.
    • இந்த கார் மணிக்கு 100 கி.மீ. வேகத்தை 9 நொடிகளில் எட்டிவிடும்.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நெக்சான் EV பிரைம் மற்றும் நெக்சான் EV மேக்ஸ் மாடல்களுக்கு தள்ளுபடி அறிவித்து இருக்கிறது. நெக்சான் EV ஃபேஸ்லிஃப்ட் மாடல் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், அதற்கு முந்தைய வெர்ஷன் இன்னும் முழுமையாக விற்றுத்தீரவில்லை என்று தெரிகிறது. அந்த வகையில், இரு மாடல்களுக்கு அதிகபட்சம் ரூ. 2 லட்சத்து 60 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன.

    இவை தள்ளுபடி மற்றும் எக்சேன்ஜ் சலுகைகள் வடிவில் வழங்கப்படுகின்றன. இந்த சலுகைகள் டிசம்பர் 31-ம் தேதி அல்லது ஸ்டாக் இருக்கும் வரை வழங்கப்படுகிறது. மேலும் இந்த பலன்கள் ஒவ்வொரு விற்பனையாளரை பொருத்து வேறுபடும்.

    இந்திய சந்தையில் டாடா நெக்சான் EV பிரைம் மாடலின் விலை ரூ. 14 லட்சத்து 49 ஆயிரம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 17.5 லட்சம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இந்த மாடல் ரூ. 1 லட்சத்து 40 ஆயிரம் தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படும்.

     


    இந்தியாவில் டாடா நெக்சான் EV மேக்ஸ் மாடலின் விலை ரூ. 16 லட்சத்து 49 ஆயிரம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 20 லட்சத்து 04 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இந்த மாடல் தற்போது ரூ. 2 லட்சத்து 10 ஆயிரம் தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படுகிறது. இரு மாடல்களுடன் அதிகபட்சம் ரூ. 50 ஆயிரம் வரையிலான எக்சேன்ஜ் பலன்கள் வழங்கப்படுகின்றன.

    டாடா நெக்சான் EV மேக்ஸ் மாடலில் உள்ள எலெக்ட்ரிக் மோட்டார் 141 ஹெச்.பி. திறன் வெளிப்படுத்துகிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 9 நொடிகளில் எட்டிவிடும். இத்துடன் 40.5 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்படுகிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 437 கிலோமீட்டர்கள் வரை செல்லும்.

    நெக்சான் EV பிரைம் மாடலில் உள்ள மோட்டார் 127 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்துகிறது. இதில் உள்ள 30.2 கிலோவாட் ஹவர் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 312 கிலோமீட்டர்கள் வரை பயணிக்க முடியும்.

    • காம்பேக்ட் எஸ்.யு.வி. பிரிவில் கவனம் செலுத்த நிசான் முடிவு.
    • மேக்னைட் மாடலை பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டம்.

    நிசான் இந்தியா நிறுவனம் 2025 ஆண்டு மிட்சைஸ் எஸ்.யு.வி. பிரிவில் களமிறங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு முன் நிசான் நிறுவனம் தனது மேக்னைட் மாடலை முடிந்த அளவுக்கு மேம்படுத்த இருப்பதாக கூறப்படுகிறது. இதன் மூலம் இந்தியாவில் நிசான் நிறுவனத்தின் சி செக்மண்ட் எஸ்.யு.வி. அறிமுகமாகும் வரை காம்பேக்ட் எஸ்.யு.வி. பிரிவில் கவனம் செலுத்த நிசான் முடிவு செய்துள்ளது.

    அந்த வகையில், நிசான் நிறுவனம் மேக்னைட் மாடலின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை உருவாக்கி வருவதாக தெரிகிறது. இந்த கார் அடுத்த ஆண்டு மத்தியில் அறிமுகம் செய்யப்படலாம். இந்தியாவில் இருந்து வெளிநாட்டு வியாபாரத்தை கட்டமைக்கும் நோக்கில் நிசான் நிறுவனம் மேக்னைட் மாடலை மெக்சிகோ, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் லத்தீன் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இருக்கிறது.

     


    தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த நிசான் மோட்டார் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் மூத்த அலுவலர் ஃபிரான்கோ பெய்லி, "மேக்னைட் எஸ்.யு.வி. மாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. உலகம் முழுக்க பல்வேறு சந்தைகளில் இந்த மாடலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உள்நாடு மட்டுமின்றி தென் ஆப்பிரிக்காவிலும் மேக்னைட் மாடல் அமோக வெற்றி பெற்று இருக்கிறது," என தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர், "இந்த மாடலுக்கு வரவேற்பு இருக்கும் வரை அதனை மேலும் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வகையில் வளர்ச்சியடைவோம். தற்போதைக்கு இந்த காரின் வலதுபுற ஸ்டீரிங் கொண்ட வெர்ஷன் மட்டுமே உள்ளது. ஆனால் இடதுகை ஸ்டீரிங் கொண்ட மாடல் ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு, லத்தீன் அமெரிக்கா, மெக்சிகோ போன்ற சந்தைகளில் இந்த காரை கொண்டுசெல்ல உதவும். இந்த கார் அந்த சந்தைகளுக்கு ஏற்ற மாடலாகவும் இருக்கும்," என்று தெரிவித்து உள்ளார்.

    • காம்பஸ் மாடலுக்கு ரூ. 15 ஆயிரம் வரையிலான சிறப்பு பலன்கள் அறிவிப்பு.
    • ஜீப் காரை மிகக் குறைந்த மாத தவணையில் வாங்கிட முடியும்.

    ஜீப் இந்தியா நிறுவனம் தனது எஸ்.யு.வி. மாடல்களுக்கு சிறப்பு சலுகைகள் மற்றும் தள்ளுபடி போன்ற பலன்களை அறிவித்து இருக்கிறது. இந்திய சந்தையில் காம்பஸ், மெரிடியன், ராங்ளர் மற்றும் கிராண்ட் செரோக்கி போன்ற மாடல்களை ஜீப் இந்தியா நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில், காம்பஸ் மாடலுக்கு ரூ. 15 ஆயிரம் வரையிலான சிறப்பு பலன்கள் வழங்கப்படுகிறது.

    மெரிடியன் ஓவர்லேண்ட் மாடலுக்கு ரூ. 30 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. ஜீப் காம்பஸ் 4x4 மாடலுக்கு ரூ. 1 லட்சத்து 65 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது. இதில் எக்சேன்ஜ் போனஸ், கார்ப்பரேட் தள்ளுபடி மற்றும் லாயல்டி போனஸ் உள்ளிட்டவை அடங்கும். இந்த காரை மாதம் ரூ. 19 ஆயிரத்து 999 தவணையில் வாங்கிட முடியும்.

     


    ஜீப் மெரிடியன் ஓவர்லேண்ட் மாடலுக்கு அதிகபட்சம் ரூ. 4 லட்சம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. இத்துடன் ரூ. 25 ஆயிரம் வரை எக்சேன்ஜ் போனஸ் வழங்கப்படுகிறது. இந்த மாதத்தில் ஜீப் மாடல்களை வாங்குவோருக்கு ரூ. 11 லட்சத்து 85 ஆயிரம் மதிப்புள்ள பலன்களும், ஜீப் வேவ் எக்ஸ்குலூசிவ் ஓனர்ஷிப் திட்டத்திற்கான சந்தா வழங்கப்படுகிறது.

    ஜீப் காம்பஸ் மாடலுக்கு அதிகபட்சம் ரூ. 1 லட்சத்து 65 ஆயிரமும், மெரிடியன் மாடலுக்கு ரூ. 4 லட்சம் வரையிலான சலுகையும், கிராண்ட் செரோக்கி மாடலுக்கு ரூ. 11 லட்சத்து 85 ஆயிரம் வரையிலான பலன்களும் வழங்கப்படுகிறது. இந்த சலுகைகள் இந்த மாத இறுதி அல்லது ஸ்டாக் இருக்கும் வரை வழங்கப்படுகிறது. 

    • லாயல்டி பலன்கள் வடிவில் ஏராளமான சலுகைகள் வழங்கப்படுகின்றன.
    • இந்த சலுகைகள் கார் வேரியண்டிற்கு ஏற்ப வேறுபடும்.

    ரெனால்ட் இந்தியா நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு டிசம்பர் மாதத்திற்கான சிறப்பு சலுகை விவரங்களை அறிவித்து இருக்கிறது. இந்த அறிவிப்பின் படி ரெனால்ட் நிறுவனத்தின் க்விட், டிரைபர் மற்றும் கைகர் மாடல்களுக்கு தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ் மற்றும் லாயல்டி பலன்கள் வடிவில் ஏராளமான சலுகைகள் வழங்கப்படுகின்றன.

    இந்த சலுகைகள் இம்மாத இறுதி அல்லது ஸ்டாக் இருக்கும் வரை வழங்கப்படும். ரெனால்ட் கைகர் மாடலுக்கு ரூ. 65 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது. இதில் தள்ளுபடியாக ரூ. 25 ஆயிரம், எக்சேன்ஜ் போனஸ் ரூ. 20 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. இந்த சலுகைகள் கார் வேரியண்டிற்கு ஏற்ப வேறுபடும்.

     


    2023 ரெனால்ட் கைகர் மாடலுக்கு ரூ. 12 ஆயிரம் வரை கார்ப்பரேட் தள்ளுபடி, ஊரக பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு ரூ. 5 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. பழைய வாகனங்களை ஸ்கிராப் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    ரெனால்ட் க்விட் மற்றும் டிரைபர் மாடல்களுக்கு ரூ. 50 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த காரின் தேர்வு செய்யப்பட்ட வேரியண்ட்களுக்கு ரூ. 20 ஆயிரம் வரை தள்ளுபடி, ரூ. 20 ஆயிரம் வரை எக்சேன்ஜ் பலன்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் லாயல்டி பலன்களாக இரு மாடல்களுக்கும் ரூ. 10 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது.

     


    க்விட் மற்றும் டிரைபர் மாடலை வாங்கும் கார்ப்பரேட் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 12 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. க்விட் RXE மற்றும் அர்பன் நைட் எடிஷன் வேரியண்ட்களுக்கு லாயல்டி மற்றும் எக்சேன்ஜ் போனஸ் மட்டுமே வழங்கப்படுகிறது.

    மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் சலுகைகள் வாடிக்கையாளர் வசிக்கும் பகுதி, கார் மாடல், வேரியண்ட், நிறம், விற்பனை மையம் மற்றும் வாகனங்கள் இருப்புக்கு ஏற்றார்போல் வேறுபடும்.

    • இந்த மாடல்களுக்கு மட்டும் இந்த சலுகைகள் எதுவும் பொருந்தாது.
    • இந்த கார் மூன்றுவித எரிபொருள் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவன விற்பனையாளர்கள் கார் மாடல்களுக்கு அதிகபட்சம் ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் வரையிலான பலன்களை அறிவித்துள்ளனர். இவை தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடி வடிவில் வழங்கப்படுகின்றன. டாடா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகனங்கள், பன்ச் மற்றும் சமீபத்தில் அறிமுகமான ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட நெக்சான், ஹேரியர் மற்றும் சஃபாரி மாடல்களுக்கு மட்டும் இந்த சலுகைகள் எதுவும் பொருந்தாது.

    டாடா நிறுவனத்தின் ஃபுல் சைஸ் எஸ்.யு.வி. மாடல் ஹேரியர் வாங்குவோருக்கு ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. டாடா ஹேரியர் மாடல் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 170 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

     


    இந்திய சந்தையில் டாடா ஹேரியர் மாடல் மஹிந்திரா XUV700, எம்.ஜி. ஹெக்டார் மற்றும் ஜீப் காம்பஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. டாடா சஃபாரி மாடலுக்கும் ரூ. 1.50 லட்சம் வரையிலான சலுகை வழங்கப்படுகிறது. 5 சீட்டர் வேரியண்ட் என்பதோடு, இந்த மாடலின் திறன் மற்றும் பவர்டிரெயின் உள்ளிட்டவை ஹேரியர் மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது.

    டாடா டிகோர் மாடலை வாங்குவோருக்கு ரூ. 65 வரையிலான சலுகைகள் வழங்கப்படுகிறது. இதன் CNG மாடலுக்கு மட்டும் ரூ. 55 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது. இந்த கார் ஹோண்டா அமேஸ், மாருதி சுசுகி டிசையர் மற்றும் ஹூண்டாய் ஆரா போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. டாடா டியாகோ மாடலுக்கு ரூ. 60 ஆயிரம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்த கார் மாருதி சுசுகி ஸ்விஃப்ட் மற்றும் ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் மாடலுக்கு போட்டியாக அமைகிறது.

     


    பிரீமியம் ஹேச்பேக் மாடலான டாடா அல்ட்ரோஸ் ரூ. 45 ஆயிரம் வரையிலான சலுகைகளுடன் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த கார் பெட்ரோல், டீசல் மற்றும் CNG என மூன்றுவித எரிபொருள் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது. இவை 1.2 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் மற்றும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆகும். இவற்றுடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன், 6 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது.

    • மஹிந்திரா நிறுவன கார் மாடல்கள் விலை மாற்றம்.
    • மஹிந்திரா கார்களின் விலை மாற்றம் அடுத்த ஆண்டு அமலுக்கு வருகிறது.

    மஹிந்திரா நிறுவனம் தனது கார் மாடல்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது. அதன்படி மஹிந்திரா எஸ்.யு.வி. மாடல்கள் விலை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் அதிகரிக்கப்படுகிறது. எந்தெந்த மாடல்களுக்கு எவ்வளவு விலை உயர்த்தப்படும் என்ற தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

    பணவீக்கம் காரணமாக உதிரி பாகங்கள் விலை உயர்ந்துள்ளதே விலை உயர்வுக்கு காரணம் என்று தெரிகிறது. பணவீக்க சூழலிலும் முடிந்தவரை விலையை கட்டுப்படுத்த முயற்சித்ததாகவும், வேறு வழியின்றிதான் கார்களின் விலையை உயர்த்தும் முடிவை எடுத்ததாக மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது.

     


    இந்த அறிவிப்பு மூலம் இந்தியாவில் தனது வாகனங்கள் விலையை உயர்த்தும் புதிய நிறுவனமாக மஹிந்திரா இணைந்துள்ளது. முன்னதாக மாருதி சுசுகி, ஹூண்டாய், எம்.ஜி. மோட்டார்ஸ், ஆடி மற்றும் டாடா மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்கள் தங்களது வாகனங்கள் விலை அடுத்த மாதத்தில் இருந்து உயர்த்தப்படும் என அறிவித்தன.

    • டாப் எண்ட் மாடல் விலை ரூ. 9 லட்சம் என்று நிர்ணயம்.
    • அல்கசார் மாடலுக்கு ரூ. 35 ஆயிரம் வரையிலான பலன்கள் அறிவிப்பு.

    ஹூண்டாய் நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடி உள்ளிட்ட பலன்களை அறிவித்து இருக்கிறது. அந்த வகையில் ஹூண்டாய் கார் வாங்குவோருக்கு அதிகபட்சம் ரூ. 1.5 லட்சம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. இவை தள்ளுபடி, எக்சேன்ஜ் சலுகை மற்றும் கார்ப்பரேட் பலன்கள் வடிவில் வழங்கப்படுகிறது.

    அதன்படி ஹூண்டாய் ஆரா மாடலுக்கு அதிகபட்சம் ரூ. 33 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது. ஆரா CNG மாடல்களுக்கு ரூ. 33 ஆயிரமும், பெட்ரோல் வேரியண்ட்களுக்கு ரூ. 23 ஆயிரம் வரையிலான பலன்களும் வழங்கப்படுகின்றன. அதன்படி இந்திய சந்தையில் இதன் விலை ரூ. 6 லட்சத்து 44 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 9 லட்சம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

     

    ஹூண்டாய் அல்கசார் மாடலுக்கு ரூ. 35 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. இதன் டீசல் வேரியண்ட்களுக்கு ரூ. 20 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. இந்த கார் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் என இருவித ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 16 லட்சத்து 77 ஆயிரம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 21 லட்சத்து 13 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    ஹூண்டாய் வெர்னா மாடலுக்கு ரூ. 45 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. கிராண்ட் i10 நியோஸ் மாடலுக்கு ரூ. 48 ஆயிரமும், ஹூண்டாய் i20 மாடலுக்கு ரூ. 20 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. ஹூண்டாய் டக்சன் மாடலுக்கு ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. எனினும், இது டீசல் வேரியண்ட்களுக்கு மட்டுமே பொருந்தும். 

    ×