search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    ஸ்கோடா ஆக்டேவியா: ஜூலை 13-இல் வெளியாகும் என தகவல்
    X

    ஸ்கோடா ஆக்டேவியா: ஜூலை 13-இல் வெளியாகும் என தகவல்

    ஸ்கோடா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆக்டேவியா 2017 செடான் மாடல் விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. புதிய மாடலில் வழங்கப்படவுள்ள வசதிகளை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    ஸ்கோடா நிறுவனம் கடந்த ஆண்டு அக்டோபரில் வெளியிட்ட ஆக்டேவியா செடான் 2017 மாடல் விரைவில் இந்தியாவில் ஜூலை 13-ந்தேதி வெளியிடப்படலாம்.

    மேம்படுத்தப்பட்ட ஆக்டேவியா இன்டீரியர் பெரும்பாலும் மாற்றப்பட்டுள்ளது. வெளிப்புறத்தை பொருத்த வரை டூயல்-ஸ்ப்லிட் எல்இடி மின்விளக்குகலும், மாற்றியமைக்கப்பட்ட பம்ப்பர்கள் மற்றும் புதிய அலாய் வீல், மாற்றியமைக்கப்பட்ட எல்இடி டெயில் லேம்ப் இடம்பெற்றுள்ளது. 



    காரின் உள்புறம் அதிகப்படியான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, டூயல்-டோன் மெத்தைகள், பிரஷ்டு அலுமினியம்-எஃபெக்ட் பிளாஸ்டிக் டோர் பேட்ஸ், மிகப்பெரிய தொடுதிரை மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி, ஆப்பிள் கார்பிளே மற்றும் கேபினுடன் இணைக்கப்பட்ட மிரர் லின்க் புதிய காருக்கு பிரீமியம் தோற்றத்தை ஏற்படுத்துகிறது.

    புதிய ஆக்டேவியா 1.4-லிட்டர் TSI பெட்ரோல் - ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 1.8-லிட்டர் 7-ஸ்பீட் DSG அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 2.0 TDI டீசல் 6-ஸ்பீட் ஆட்டோமேடிக் டிரான்ல்மிஷன் மாடல்களில் வெளியாகிறது. 

    முந்தைய ஆக்டேவியா மாடல் இந்தியாவில் 2013-ம் ஆண்டு வெளியிட்டப்பட்டது. புதிய ஸ்கோடா ஆக்டேவியா தற்சமயம் இருப்பதை விட ரூ.20,000 முதல் ரூ.30,000 வரை அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம் என்றாலும், விலை ஜுலை 13-ந்தேதி அறிவிக்கப்படும்.
    Next Story
    ×