search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    • கிரெட்டா N லைன் மாடல் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
    • இந்த கார் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது.

    ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கிரெட்டா N லைன் மாடலை அறிமுகம் செய்தது. புதிய கிரெட்டா N லைன் எஸ்.யு.வி. மாடலின் விலை ரூ. 16 லட்சத்து 82 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த கார் N8 மற்றும் N10 என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    புதிய கிரெட்டா N லைன் எஸ்.யு.வி.-இல் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 158 ஹெச்.பி. பவர், 253 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு DCT கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.

     


    இந்த கார் லிட்டருக்கு எவ்வளவு மைலேஜ் வழங்கும் என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி புதிய கிரெட்டா N லைன் எஸ்.யு.வி. மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் வெர்ஷன்கள் லிட்டருக்கு முறையே 18 மற்றும் 18.2 கிலோமீட்டர்கள் வரை மைலேஜ் வழங்கும் என்று ARAI சான்று பெற்று இருக்கின்றன.

    கிரெட்டா ஸ்டான்டர்டு வெர்ஷனில் உள்ள டர்போ பெட்ரோல் என்ஜின் DCT கியர்பாக்ஸ் வெர்ஷன் லிட்டருக்கு 18.4 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என்று கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஹூண்டாய் i20 N லைன் மற்றும் வென்யூ N லைன் மாடல்கள் வரிசையில் கிரெட்டா N லைன் மூன்றாவது N சீரிஸ் மாடலாக இணைந்துள்ளது.

    • பிக்ஸ்டர் மாடல் டெஸ்டிங் செய்யப்படும் புகைப்படங்கள் வெளியானது.
    • பின்புற டிசைன் சற்று வித்தியாசமாக காட்சியளிக்கும்.

    ரெனால்ட் நிறுவனத்தின் புதிய தலைமுறை டஸ்டர் மாடல் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட டஸ்டர் மாடல் இந்திய சந்தையில் மிட் சைஸ் எஸ்.யு.வி. பிரிவில் நிலைநிறுத்தப்படும் என தெரிகிறது.

    புதிய மாடல் இன்னும் ஒன்றிரண்டு ஆண்டுகளில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இந்த கார் 5 சீட்டர் வடிவில் அறிமுகமாகுமா அல்லது 7 சீட்டர் வடிவில் அறிமுகம் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இந்த நிலையில், டஸ்டரின் 7 சீட்டர் வெர்ஷனான பிக்ஸ்டர் மாடல் டெஸ்டிங் செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

     


    புதிய பிக்ஸ்டர் மாடல் CMF-B ஆர்கிடெக்ச்சரில் உருவாகி இருக்கும் என்று தெரிகிறது. இந்த கார் 4.6 மீட்டர் நீளமாக இருக்கும் என்றும் இதன் வீல்பேஸ் பின்புற இருக்கைகளுக்கு ஏற்ற வகையில் அளவில் நீண்டு இருக்கும் என்று தெரிகிறது. இதன் காரணமாக இந்த காரின் புன்புற டிசைன் வழக்கமான டஸ்டர் போன்றில்லாமல் சற்று வித்தியாசமாக காட்சியளிக்கும்.

    எனினும், இதன் விலை மற்றும் உற்பத்தி செலவீனங்களை குறைவாக வைத்துக் கொள்ளும் நோக்கில், புதிய பிக்ஸ்டர் மாடலின் பாடி பேனல்கள், மெக்கானிக்கல் பாகங்கள் மற்றும் பவர்டிரெயின் ஆப்ஷன்கள் டஸ்டர் மாடலில் இருப்பதை போன்றே வழங்கப்படும் என்று தெரிகிறது.

    இந்திய சந்தையில் அறிமுகமாகும் பட்சத்தில் புதிய டஸ்டர் மாடல் மஹிந்திரா XUV700, டாடா சஃபாரி, ஹூண்டாய் அல்கசார், எம்.ஜி. ஹெக்டார் பிளஸ் மற்றும் சிட்ரோயன் C3 ஏர்கிராஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும். 

    • டெஸ்டிங் செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
    • வட்ட வடிவில் டியூப் போன்ற கிராப் ரெயில் உள்ளது.

    ராயல் என்பீல்டு நிறுவனம் 650சிசி பிரிவில் மூன்று மோட்டார்சைக்கிள் மாடல்களை உருவாக்கி வருவது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் முற்றிலும் புதிய புல்லட் 650 மாடல் டெஸ்டிங் செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

    அதன்படி புதிய புல்லட் 650 மாடலின் தோற்றம் கிளாசிக் 650 போன்றே காட்சியளிக்கிறது. இரு மாடல்களும் அவற்றின் 350சிசி மாடல்களை போன்றே காட்சியளிக்கின்றன. இரு மாடல்களிலும் சதுரங்க வடிவம் கொண்ட ரியர் ஃபென்டர், வட்ட வடிவில் டியூப் போன்ற கிராப் ரெயில் வழங்கப்பட்டு இருக்கிறது.

     


    தற்போதைய ஸ்பை படங்களில் உள்ள மாடல் முந்தைய ஸ்பை படங்களில் இருந்ததை விட வித்தியாசமாக காட்சியளிக்கின்றன. புதிய புல்லட் மற்றும் கிளாசிக் 650 மாடல்களில் ஒரே ஃபிரேம் வழங்கப்பட்டு உள்ளது. இந்த மாடல்களில் 650சிசி டுவின் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த யூனிட் 47 ஹெச்.பி. பவர், 52 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

    புதிய ராயல் என்பீல்டு 650 சிசி மாடல்களிலும் எல்.இ.டி. ஹெட்லைட் வழங்கபடும் என தெரிகிறது. முன்னதாக சூப்பர் மீடியோர் மாடலில் எல்.இ.டி. ஹெட்லைட் முதல் முறையாக வழங்கப்பட்டது. ஷாட்கன் போன்றே புதிய 650 டுவின் மாடல்களில் டுவின் எக்சாஸ்ட் பைப்கள் வழங்கப்படுகின்றன. 

    • நபோலி பிளாக் நிறத்திற்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்டது.
    • இதர எஸ்.யு.வி.-க்கள் நபோலி பிளாக் நிறத்தில் கிடைக்கிறது.

    மஹிந்திரா நிறுவனம் தனது இரண்டு பிரபல எஸ்.யு.வி.- தார் மற்றும் ஸ்கார்பியோ கிளாசிக் மாடல்களை சத்தமின்றி அப்டேட் செய்துள்ளது. இரண்டு எஸ்.யு.வி.-க்களும் தற்போது புதிய பிளாக் நிறத்தில் கிடைக்கின்றன. இந்த நிறம் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வந்த நபோலி பிளாக் நிறத்திற்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்டது.

     


    தற்போது தார் மற்றும் ஸ்கார்பியோ கிளாசிக் மாடல்கள் முறையே ஐந்து மற்றும் நான்கு வித நிறங்களில் விற்பனைக்கு கிடைக்கின்றன. அதன்படி இரு எஸ்.யு.வி.-க்களும் ஸ்டெல்த் பிளாக் நிறத்திலும் கிடைக்கின்றன. மஹிந்திராவின் இதர எஸ்.யு.வி.-க்கள்- ஸ்கார்பியோ N, XUV700, XUV300 மற்றும் பொலிரோ நியோ உள்ளிட்டவை நபோலி பிளாக் நிறத்தில் கிடைக்கிறது.

     


    முன்னதாக மஹிந்திரா நிறுவனம் தனது XUV300 மாடலுக்கான முன்பதிவுகளை நிறுத்துவதாக அறிவித்தது. அந்த வகையில், இந்த காரின் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட வெர்ஷன் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

    • மூன்று எலெக்ட்ரிக் வாகனங்கள் இடம்பெற்று இருக்கும் என்று தெரிகிறது.
    • பல்வேறு பாடி ஸ்டைல்களில் கார்களை உருவாக்க முடியும்.

    மாருதி சுசுகி நிறுவனம் அடுத்த சில ஆண்டுகளில் பல்வேறு கார் மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. இதில் பலேனோ, ஃபிரான்க்ஸ், ஸ்விஃப்ட் மற்றும் இதர கார் மாடல்களின் ஹைப்ரிட் வெர்ஷன்கள் இடம்பெற்றிருக்கும் என்று கூறப்பட்டது.

    இவைதவிர மாருதி நிறுவனம் தனது வாகனங்களை முழுமையாக மாற்றியமைக்கும் நோக்கில் முற்றிலும் புதிதாக எட்டு கார் மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் எஸ்.யு.வி.-க்கள், எம்.பி.வி.-க்கள் மற்றும் மூன்று எலெக்ட்ரிக் வாகனங்கள் இடம்பெற்று இருக்கும் என்று தெரிகிறது.

     


    இதில் ஒரு மாடல் தாமதமாகவே வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த மாடல் எலெக்ட்ரிக் எம்.பி.வி. என்றும் இது YMC எனும் குறியீட்டு பெயரில் உருவாக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. எலெக்ட்ரிக் வாகனங்களுக்காக மாருதி மற்றும் டொயோட்டா நிறுவனங்கள் இணைந்து பார்ன்-இவி (Born EV) ஆர்கிடெக்ச்சரை உருவாக்கி வருகின்றன.

    இதை கொண்டு பல்வேறு பாடி ஸ்டைல்களில் கார்களை உருவாக்க முடியும். இந்த ஆர்கிடெக்ச்சரில் உருவாகும் எம்.பி.வி. மாடல் தான் YMC எனும் குறியீட்டு பெயர் கொண்டிருக்கிறது என்றும், இந்த மாடல் eVX அறிமுகமாகி ஒன்றரை ஆண்டுகள் கழித்தே அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. அறிமுகமாகும் போது மாருதி YMC மாடல் அந்நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் எம்.பி.வி.-யாக இருக்கும்.

    மாருதியின் புதிய எம்.பி.வி. மாடல் பற்றிய விவரங்கள் மர்மமாகவே உள்ள நிலையில், இதில் 40 கிலோவாட் ஹவர் மற்றும் 60 கிலோவாட் ஹவர் என இருவித பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த காரின் ரேன்ஜ் மாருதி eVX மாடலுக்கு இணையாக 550 கிலோமீட்டர்கள் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. 

    • பயனர்களின் ரைடிங் அனுபவத்தை மேம்படுத்தும் என தெரிகிறது.
    • பயனர்களின் குறையை தீர்த்து வைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

    எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் உற்பத்தியாளரான ஜீரோ மோட்டார்சைக்கிள்ஸ் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களில் பயன்படுத்துவதற்கென முற்றிலும் புதிய கிளட்ச் சிஸ்டத்திற்கான காப்புரிமை கோரி விண்ணப்பித்து இருக்கிறது. புதிய கிளட்ச் சிஸ்டம் பயனர்களின் ரைடிங் அனுபவத்தை மேம்படுத்தும் என தெரிகிறது.

    வழக்கமாக எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடல்களில் கிளட்ச் வங்கப்படுவதில்லை. மோட்டார்சைக்கிள் தோற்றத்தில் இருந்த போதிலும், பயனர்களுக்கு முழுமையான பைக் ஓட்டும் அனுபவத்தை வழங்காமல் உள்ளது. புதிய சிஸ்டம் பயன்பாட்டிற்கு வரும் போது, பயனர்களின் குறையை தீர்த்து வைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

     

    Source: Bikewale

    Source: Bikewale


    காப்புரிமையின் படி புதிய கிளட்ச் சிஸ்டம் வழக்கமான கிளட்ச் போன்றே இயங்குகிறது. புதிய கிளட்ச் சிஸ்டம் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளின் டார்க் மற்றும் குறைந்த வேகத்தில் ரி-ஜெனரேடிவ் பிரேக்கிங்-ஐ கட்டுப்படுத்த உதவுகிறது.

    கிளட்ச் லீவரை விடுவித்ததும், மோட்டாரில் இருந்து அதிகப்பட்ச திறனை வெளிப்படுத்த உதவுகிறது. இது வழக்கமான மோட்டார்சைக்கிளில் உள்ளதை போன்றே இயங்குவதால், பெட்ரோல் பைக் அனுபவத்தை அப்படியே கொடுக்கும் என்று தெரிகிறது.

     

    Source: Bikewale

    Source: Bikewale


    புதிய கிளட்ச் சிஸ்டத்தை பெறும் முதல் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடலாக ஜீரோ SR/F என கூறப்படுகிறது. ஜீரோ நிறுவனத்தின் SR/F, SR/S ஸ்போர்ட்ஸ் டூரர் மற்றும் DSR/X எலெக்ட்ரிக் அட்வென்ச்சர் டூரர் மாடல்களிடையே ஒற்றுமைகள் உள்ள நிலையில், இவற்றிலும் புதிய கிளட்ச் சிஸ்டம் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

    • ஃபோர்டு எவரஸ்ட் பெயரில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • டொயோட்டா ஹிலக்ஸ், இசுசு டி மேக்ஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    ஃபோர்டு நிறுவனத்தின் முற்றிலும் புதிய ரேஞ்சர் மாடல் இந்தியாவில் டெஸ்டிங் செய்யப்படுகிறது. இந்த கார் டிரக் ஒன்றின் மீது எடுத்துச் செல்லப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இத்துடன் ஃபோர்டு என்டேவர் மாடலும் காணப்பட்டது. இதே கார் சர்வதேச சந்தையில் ஃபோர்டு எவரஸ்ட் பெயரில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இரு மாடல்களும் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் காணப்பட்டுள்ளது. ஃபோர்டு நிறுவனத்தின் ரேஞ்சர் மாடல் உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்படும் பிரபல எஸ்.யு.வி. ஆகும். இந்த மாடல் டொயோட்டா ஹிலக்ஸ் மற்றும் இசுசு டி மேக்ஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

     


    இந்த எஸ்.யு.வி. பெட்ரோல், டீசல் என இருவித பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த காரின் ரேப்டர் பெர்ஃபார்மன்ஸ் வேரியண்டில் உள்ள 3.0 லிட்டர் வி6 பெட்ரோல் என்ஜின் 288 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

    ரேஞ்சர் எஸ்.யு.வி. மாடல் இதுவரை இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டதே இல்லை. எனினும், இந்த மாடலின் தோற்றம் கிட்டத்தட்ட ஃபோர்டு என்டேவர் எஸ்.யு.வி.-யை போன்றே காட்சியளிக்கிறது. ஒருவேளை இந்த மாடல் இந்திய சந்தையில் அறிமுகமாகும் பட்சத்தில் டொயோட்டா ஹிலக்ஸ் மற்றும் இசுசு டி மேக்ஸ் மாடல்களுக்கு போட்டியை ஏற்படுத்தும்.

    • புதிய மாடல்களுக்கு இந்த சலுகைகள் வழங்கப்படுகின்றன.
    • ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட மாடல்களுக்கு வழங்கப்படவில்லை.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் கார் மாடல்களுக்கு மாதாந்திர சலுகைகளை அறிவித்து இருக்கிறது. எனினும், இந்த சலுகைகள் எதுவும் பன்ச் EV மாடலுக்கு மட்டும் வழங்கப்படவில்லை. மேலும் 2023 ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட கார்கள் மற்றும் 2024 புதிய மாடல்களுக்கு இந்த சலுகைகள் வழங்கப்படுகின்றன.

    2023 ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட்-க்கு முந்தைய மாடல்களுக்கு டாடா உற்பத்தியாளர்கள் அசத்தல் சலுகைகளை அறிவித்துள்ளனர். அதன்படி நெக்சான் EV பிரைம் மாடலுக்கு ரூ. 2 லட்சத்து 30 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 50 ஆயிரம் வரை எக்சேன்ஜ் போனஸ் வழங்கப்படுகிறது. நெக்சான் EV மேக்ஸ் மாடலுக்கு ரூ. 2 லட்சத்து 65 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 50 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ் வழங்கப்படுகிறது.

    நெக்சான் EV பிரைம் மாடலில் 129 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் எலெக்ட்ரிக் மோட்டார், 30.2 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 312 கிலோமீட்டர்கள் வரை செல்லும் என சான்று பெற்று இருக்கிறது.

    நெக்சான் EV மேக்ஸ் மாடலில் 143 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் எலெக்ட்ரிக் மோட்டார் உள்ளது. இந்த காரில் உள்ள 40.5 கிலோவாட் ஹவர் பேட்டரி முழு சார்ஜ் செய்தால் 437 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என சான்று பெற்று இருக்கிறது.

    கடந்த ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட நெக்சான் EV மாடல்களுக்கு ரூ. 50 ஆயிரம் வரை கிரீன் போனஸ், 2024 ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட மாடல்களுக்கு ரூ. 20 ஆயிரம் வரை கிரீன் போனஸ் வழங்கப்படுகிறது. இவைதவிர ரொக்க தள்ளுபடி மற்றும் எக்சேன்ஜ் போனஸ் உள்ளிட்டவை ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட மாடல்களுக்கு வழங்கப்படவில்லை.

    இந்திய சந்தையில் நெக்சான் EV மாடல் மீடியம் ரேன்ஜ் மற்றும் லாங் ரேன்ஜ் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றுடன் 7.2 கிலோவாட் AC சார்ஜர் ஸ்டான்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது. மீடியம் ரேன்ஜ் வேரியண்டை இந்த சார்ஜர் 4.3 மணி நேரத்தில் 10-இல் இருந்து 100 சதவீதம் வரை சார்ஜ் செய்துவிடும். லாங் ரேன்ஜ் வேரியண்டில் இது 6 மணி நேரத்தில் சார்ஜ் செய்துவிடும்.

    • பஜாஜ் சி.என்.ஜி. பைக் அடுத்த ஆண்டு அறிமுகமாகும் என்று கூறப்பட்டது.
    • புதிய மாடல் அதிக யூனிட்கள் விற்பனையாகும் என எதிர்பார்க்கலாம்.

    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது முதல் சி.என்.ஜி. மோட்டார்சைக்கிளை அடுத்த காலாண்டிற்குள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக இந்த மோட்டார்சைக்கிளை 2025 வாக்கில் அறிமுகப்படுத்த பஜாஜ் நிறுவனம் திட்டமிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

    இது தொடர்பாக தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி பஜாஜ் நிறுவனத்தின் சி.என்.ஜி. மோட்டார்சைக்கிள் ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. தற்போது வரை இந்த மாடல் பற்றிய இதர விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

    எனினும், இந்த மாடல் பல்வேறு பிரிவுகளில் நிலைநிறுத்தக்கூடிய வகையில், 100சிசி-யில் இருந்து 160சிசி வரையிலான திறன் கொண்டிருக்கும் என தெரிகிறது. நகர்ப்புறங்களில் பஜாஜ் நிறுவனம் அதிக வாடிக்கையாளர்களை பெறுவதில்லை. இதன் காரணமாக புதிய சி.என்.ஜி. மோட்டார்சைக்கிள் பஜாஜ் நிறுவனத்திற்கு நகர்ப்புற விற்பனையை அதிகப்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.

    • வால்வோ XC40 ரிசார்ஜ் மாடலில் ADAS சூட் உள்ளது.
    • இந்த கார் முழு சார்ஜில் 475 கிமீ ரேன்ஜ் வழங்குகிறது.

    வால்வோ நிறுவனம் தனது XC40 ரிசார்ஜ் எலெக்ட்ரிக் காரின் புதிய வேரியண்ட்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. புதிய வேரியண்டில் ஒற்றை மோட்டார் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. இது காரின் பின்புற ஆக்சிலில் பொருத்தப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் புதிய வால்வோ XC40 ரிசார்ஜ் வேரியண்டின் விலை ரூ. 54 லட்சத்து 95 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய வேரியண்ட் ஏற்கனவே விற்பனை செய்யப்படும் XC40 ரிசார்ஜ் டூயல் மோட்டார், ஆல்வீல் டிரைவ் வேரியண்டின் கீழ் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. இந்த வேரியண்டின் விலை ரூ. 57.9 லட்சம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

     


    என்ட்ரி லெவல் மாடல் என்ற வகையில், புதிய வேரியண்ட்-இல் பிக்சல் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், ஃபாக் லேம்ப்கள், 360 டிகிரி கேமரா, ஹார்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம் போன்ற வசதிகள் வழங்கப்படவில்லை. மாற்றாக இந்த காரில் 8 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், 2-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், 12 இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, 9 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் யூனிட் உள்ளது.

    இத்துடன் பார்க் அசிஸ்ட், 19 இன்ச் அலாய் வீல்கள், பானரோமிக் சன்ரூஃப், முன்புறம் பவர்டு இருக்கைகள், வயர்லெஸ் போன் சார்ஜிங் போன்ற வசதிகள் உள்ளன. பாதுகாப்பிற்கு 7 ஏர்பேக், லேன் கீப் அசிஸ்ட், அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல், கிராஸ் டிராஃபிக் அலர்ட்கள், ரியர் கொலிஷன் வார்னிங் போன்ற வசதிகளை வழங்கும் ADAS சூட் உள்ளது.

     


    இதில் உள்ள ஒற்றை மோட்டார் 238 ஹெச்.பி. பவர், 420 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 7.3 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டுள்ளது. இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 180 கிலோமீட்டர்கள் வேகத்தில் செல்லும்.

    வால்வோ XC40 ரிசார்ஜ் புதிய வேரியண்டில் 69 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 475 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என சான்று பெற்றுள்ளது.

    • அம்சங்களை இயக்குவதற்கு டச் கண்ட்ரோல்களையே வழங்குகின்றன.
    • செலவீனமும் குறையும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    ஆட்டோமொபைல் துறையில் அதிநவீன தொழில்நுட்பங்களின் வரவு காரணமாக கார் உற்பத்தியாளர்கள் தங்களது மாடல்களில்- அளவில் பெரிய தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்கள், டிஜிட்டல் காக்பிட் மற்றும் ஏராளமான டச் கண்ட்ரோல்களை வழங்குகின்றன. இதன் காரணமாக கார்களின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் ஏராளமான பட்டன்கள் காணாமல் போயின.

    பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து, ஓட்டுநர்கள் கவனம் சிதறுவதை தடுக்கும் வகையில் யூரோ என்கேப் (NCAP) புதிய விதிகளை அமலுக்கு கொண்டுவரும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய விதிகளின் படி ஐந்து நட்சத்திர குறியீட்டை பெறுவதற்கு கார்களின் டர்ன் சிக்னல்கள், வைப்பர் உள்ளிட்டவைகளை இயக்க கட்டாயமாக பட்டன்களை வழங்க வேண்டும்.

     


    கார் உற்பத்தியாளர்கள் டர்ன் சிக்னல்கள், ஹாரன், வைப்பர்கள், எச்சரிக்கை மின்விளக்கை இயக்குவது, அவசர அழைப்புகளை மேற்கொள்வது போன்ற வசதிகளை இயக்க பட்டன்கள் மற்றும் டயல்களை வைத்துள்ளன. எனினும், டெஸ்லா, வோக்ஸ்வேகன் போன்ற கார் உற்பத்தியாளர்கள் பல்வேறு அம்சங்களை இயக்குவதற்கு டச் கண்ட்ரோல்களையே வழங்குகின்றனர்.

    இவ்வாறு செய்யும் போது இன்ஃபோடெயின்மென்டிலேயே பல்வேறு வசதிகளும் வழங்கப்படுகின்றன. வழக்கமான கண்ட்ரோல்களை வழங்குவதை விட அதிநவீன டச் ஸ்கிரீன்களை பயன்படுத்தும் போது செலவீனமும் குறையும் என புதிய விதிகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    "அதிகளவில் தொடுதிரை பயன்படுத்துவது சந்தை முழுக்க பிரச்சினையை ஏற்படுத்துகிறது. கிட்டத்தட்ட அனைத்து வாகன உற்பத்தியாளரும் சென்ட்ரல் டச் ஸ்கிரீன்களில் மிக முக்கிய கண்ட்ரோல்களை வழங்குகின்றன. இதன் காரணமாக ஓட்டுநரின் கவனம் சிதைந்து, விபத்துகள் ஏற்படும் ஆபத்தை அதிகப்படுத்துகிறது," என யூரோ என்கேப் திட்ட அதிகாரி மேத்யூ அவெரி தெரிவித்துள்ளார்.

    • இந்த ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 90 கி.மீ. வேகத்தில் செல்லும்.
    • முன்னதாக ஒலா S சீரிஸ் மாடல்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டன.

    ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது S1 X எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை முற்றிலும் புதிய நிறங்களில் அறிமுகம் செய்துள்ளது. அந்த வகையில், ஒலா S1 X மாடல்- ஃபன்க், ஸ்டெல்லார், ரெட் வெலாசிட்டி, வோக் மற்றும் மிட்நைட் என ஐந்து டூயல் டோன் நிறங்களில் கிடைக்கிறது. புதிய நிறங்கள் அதிக பிரகாசமாகவும், சிங்கில் டோன் நிறங்களை விட அதிக வித்தியாசமாகவும் காட்சியளிக்கின்றன.

    நிறங்கள் தவிர ஒலா S1 X மாடல்களில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. ஒலா S1 X மாடலில் 2.7 கிலோவாட் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 90 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.

     


    இதே ஸ்கூட்டர் 3 கிலோவாட் ஹவர் மற்றும் 4 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது. இந்த வேரியண்ட்கள் முழு சார்ஜ் செய்தால் முறையே 151 கிலோமீட்டர்கள் மற்றும் 190 கிலோமீட்டர்கள் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது.

    சமீபத்தில் ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது S1 சீரிஸ் மாடல்களுக்கு அசத்தல் சலுகைகளை அறிவித்து இருந்தது. இவை இம்மாத இறுதிவரை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. முன்னதாக பிப்ரவரி மாதத்தில் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்க அதிகளவில் முன்பதிவுகளை பெற்றதாக அந்நிறுவனம் அறிவித்து இருந்தது.

    ×