search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோ டிப்ஸ்

    • சமீபத்தில் டாடா ஹேரியர் மாடல் பிஎஸ் 6 புகை விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்பட்டது.
    • மைல்கல் பற்றிய தகவல் டாடா மோட்டார்ஸ் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹேரியர் எஸ்யுவி மாடல் இந்திய சந்தையில் புது மைல்கல் எட்டியுள்ளது. உற்பத்தி ஆலையில் இருந்து ஹேரியர் மாடலின் ஒரு லட்சமாவது யூனிட் வெளியிடப்பட்டு இருக்கிறது. 2019 ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து, ஹேரியர் மாடல் ஒரு லட்சம் யூனிட்கள் விற்பனையாகி உள்ளது.

    இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு பின் டாடா ஹேரியர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளது. தற்போது 19 வெவ்வேறு வேரியண்ட்கள், ஆறு வித நிறங்களில் கிடைக்கும் எஸ்யுவி-யாக ஹேரியர் மாடல் விற்பனை செய்யப்படுகிறது. இதன் விலை ரூ. 14 லட்சத்து 99 ஆயிரம் என்று துவங்குகிறது. டாப் எண்ட் மாடல் விலை ரூ. 24 லட்சத்து 06 ஆயிரம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    புதிய விற்பனை மைல்கல் பற்றிய தகவலை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. சமீபத்தில் தான் டாடா மோட்டார்ஸ் தனது ஹேரியர் மாடலை பிஎஸ் 6 புகை விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்து இருந்தது. இதில் பானரோமிக் சன்ரூஃப், 6 வழிகளில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை, ஆட்டோ டிம்மிங் ரியர் வியூ மிரர் வழங்கப்பட்டு உள்ளது.

    இதன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் அப்கிரேடு செய்யப்பட்டு, பெரியதாக 10.25 இன்ச் அளவில் டிஸ்ப்ளே, புதிய ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இதில் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே கனெக்டிவிட்டி, iRA கனெக்டெட் வெஹிகில் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் 200-க்கும் அதிக வாய்ஸ் கமாண்ட்களை, ஆறு வித்தியாசமான மொழிகளில் இயக்கும் வசதி கொண்டிருக்கிறது. 

    • ஹோண்டா e:Ny1 மாடலில் 68.8 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது.
    • இந்த எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் கடந்த ஆண்டு சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

    ஹோண்டா நிறுவனம் தனது புதிய எலெக்ட்ரிக் வாகனம் e:Ny1 பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ஹோண்டா e ஹேச்பேக் மாடலை தொடர்ந்து ஐரோப்பிய சந்தையில் ஹோண்டா அறிமுகம் செய்திருக்கும் இரண்டாவது எலெக்ட்ரிக் கார் ஆகும்.

    டிசைனை பொருத்தவரை e:Ny1 மாடல் தற்போது விற்பனை செய்யப்படும் ஹோண்டா HR-V மற்றும் e:NS1 போன்றே காட்சியளிக்கிறது. இந்த எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் கடந்த ஆண்டு சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. HR-V மாடலை பொருத்தவரை அப்ரைட் டிசைன், ஹோண்டாவின் புதிய தலைமுறை மாடல்களை போன்ற தோற்றம் கொண்டிருக்கிறது.

    இந்த காரில் வழக்கமாக வழங்கப்படும் கிரில் மாற்றப்பட்டு புதிதாக என்க்லோஸ் செய்யப்பட்ட பேனல் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் பம்ப்பரின் கீழ்புறம் ஏர் வெண்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. இது எலெக்ட்ரிக் பவர்டிரெயினுக்கு தேவையான காற்றோட்டத்தை உறுதி செய்கிறது.

    ஹோண்டா நிறுவனத்தின் முற்றிலும் புதிய e:N ஆர்கிடெக்ச்சரில் உருவாக்கப்பட்டு இருக்கும் e:Ny1 மாடலில் 68.8 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 412 கிலோமீட்டர்கள் வரையிலான ரேஞ்ச் வழங்குகிறது. இதில் உள்ள எலெக்ட்ரிக் மோட்டார் 201 ஹெச்பி பவர், 310 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    • ஒலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையாளர் என்று நம்பி முதற்கட்டமாக ரூ. 499 தொகையை முன்பணமாக செலுத்தினார்.
    • காவல் துறையினர், புகார் கொடுத்தவர் பணம் அனுப்பிய வங்கி கணக்குகளை கொண்டு பாண்டாவை பிடித்தனர்.

    ஒலா எலெக்ட்ரிக் விற்பனையாளர் என கூறி ஏமாற்றி வந்த நபரை டெல்லி காவல் துறையினர் கைது செய்துள்ளனர். தானேவை அடுத்த டொம்பாலி பகுதியை சேர்ந்த ராஜேந்திர ஷர்மா பாண்டா என்ற நபர் 'ஒலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டி' விற்பனையாளர் என்று கூகுள் தளத்தில் போலி விளம்பரங்களை பதிவிட்டு வந்துள்ளார். இதை பார்த்து ஸ்கூட்டரை வாங்க விரும்புவோரிடம் இவர் பணம் வசூலித்து ஏமாற்றி வந்துள்ளார்.

    அந்த வகையில், துவாராகா காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்த நபரை பாண்டா ஏமாற்றி இருக்கிறார். இதையடுத்து ஏமாற்றப்பட்டவர் துவாரகா சைபர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இவரது புதாரை வைத்து முதல் தகவல் அறிக்கையை காவல் துறையினர் பதிவு செய்தனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் பாண்டாவை போலீசார் கைது செய்துள்ளனர்.

    முன்னதாக ஸ்கூட்டரை வாங்க பாண்டாவை அனுகிய நபர், பாண்டா ஒலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையாளர் என்று நம்பி முதற்கட்டமாக ரூ. 499 தொகையை முன்பணமாக செலுத்தியுள்ளார். பின் ஸ்கூட்டரை வாங்குவதற்காக ரூ. 80 ஆயிரத்து 999 தொகையை செலுத்தினார். ஒருவாரத்தில் ஸ்கூட்டர் வினியோகம் செய்யப்படும் என்று பாண்டா இவரிடம் தெரிவித்து இருக்கிறார். எனினும், இவருக்கு ஸ்கூட்டர் வினியோகம் செய்யப்படாமல் இருந்தது.

    இதைத் தொடர்ந்து, தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து காவல் நிலையத்தின் உதவியை நாடியிருக்கிறார். காவல் துறையினர் புகார் கொடுத்தவர், பணம் அனுப்பிய வங்கி கணக்குகளை கொண்டு பாண்டாவை பிடித்தனர். காவல் துறையிடம் சிக்கிய பாண்டா தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டிருக்கிறார்.

    • யுலு நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் டெலிவரி பணிகளுக்கானதாகும்.
    • இந்த ஸ்கூட்டர் ஸ்கார்லெட் ரெட் மற்றும் மூன்லைட் வைட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.

    யுலு நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வின் எனும் பெயரில் கிடைக்கிறது. முன்னதாக வினியோக பணிகளுக்கு பயன்படுத்தக்கூடிய மாடல்களை யுலு உருவாக்கி வந்த நிலையில், புதிய ஸ்கூட்டர் தனித்துவ மொபிலிட்டி பிரிவில் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது.

    அறிமுக சலுகையாக புதிய யுலு வின் (Wynn) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை ரூ. 55 ஆயிரத்து 555 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்கூட்டருக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 999 ஆகும். வினியோகம் மே மாத மத்தியில் துவங்க இருக்கிறது. அறிமுக சலுகைகள் நிறைவுற்றதும், இந்த ஸ்கூட்டரின் விலை ரூ. 59 ஆயிரத்து 999 என்று மாறிவிடும்.

     

    புதிய யுலு வின் ஸ்கூட்டர் பேட்டரி பேக் இன்றி விற்பனை செய்யப்படுவதால் இதன் விலை குறைவாக இருக்கிறது. யுலு வின் மாடல் கழற்றி மாற்றக்கூடிய பேட்டரிகளை கொண்டிருக்கிறது. இதில் பயன்படுத்தக்கூடிய பேட்டரிகளை பயனர்கள் சந்தா முறையில் பெற்றுக் கொள்ளலாம். இத்துடன் யுமா எனர்ஜி பேட்டரி மாற்றும் நெட்வொர்க்கில் இணைந்து கொள்ளலாம். இது யுலு மற்றும் மேக்னா நிறுவனங்களின் கூட்டணியில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    யுலு வின் மாடல் டிசைன் மதன் மற்ற மாடல்களில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் ஸ்கார்லெட் ரெட் மற்றும் மூன்லைட் வைட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதுதவிர ஸ்கூட்டரில் ஆப் சார்ந்த சாவி, ஒவர் தி ஏர் கனெக்டிவிட்டி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு 25 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக இந்த ஸ்கூட்டரை பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இந்த ஸ்கூட்டரில் 250 வாட் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 19.3 Ah மாற்றக்கூடிய பேட்டரிகளை பயன்படுத்தலாம். இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் 68 கிலோமீட்டர் வரையிலான ரேஞ்ச் வழங்குகிறது.

    • வீணாக அழ வேண்டாம். காவல் துறையில் புகார் அளித்தால், கார் திரும்ப கிடைக்காது.
    • இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

    கார் திருடப்படும் சம்பவங்கள் அதன் உரிமையாளருக்கு தலைவலியை ஏற்படுத்தி விடும். எனினும், சமீபத்தில் காரை திருடிய நபர், அதன் உரிமையாளருக்கு அசத்தலாக தகவல் ஒன்றை சுவற்றில் எழுதி வைத்துள்ளனர். இந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    மார்ச் 20, 2023 ஆம் தேதி பதிவு செய்யப்பட்ட மாருதி பிரெஸ்ஸா ZXi மாடலை நபர் திருடியுள்ளார். அப்துல் அசிஸ் என்ற நபரின் காரை திருடிய மர்ம நபர், கார் நிறுத்தப்பட்டு இருந்த வீட்டின் சுவரில் ஆறுதல் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

     

    அதில், "உங்களது கார் மூன்று நாட்களில் திரும்ப கிடைத்துவிடும். வீணாக அழ வேண்டாம். காவல் துறையில் புகார் அளித்தால், கார் திரும்ப கிடைக்காது. இதனை வேறு யாரிடமும் கூற வேண்டாம். டென்ஷன் ஆகாதீர்கள்," என்று எழுதியுள்ளார்.

    எனினும், இந்த சம்பவம் குறித்து காரின் உரிமையாளர் காவல் துறையில் புகார் அளித்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சுவரில் அந்த வாசகத்தை எழுதியது யார் என்பதை கண்டறிய தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்தில் மாதிரிகளை ஆய்வு செய்துள்ளனர்.

    கார் திருடப்பட்ட சம்பவம் அசாம் மாநிலத்தின் தாராங் மாவட்டத்தில் ஏப்ரல் 25 ஆம் தேதி அதிகாலை அரங்கேறி இருக்கிறது. 

    Photo Courtesy: Rushlane

    • மாருதி ஆல்டோ 800 மாடலை ஓமியோபதி மருத்துவரான சுஷில் சாகர் பயன்படுத்தி வருகிறார்.
    • பல சமயங்களில் மக்கள் தங்களின் கார் முழுக்க மாட்டு சாணம் பூசிய சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.

    மாருதி சுசுகி ஆல்டோ 800 மாடல் முழுக்க மாட்டு சாணம் பூசப்பட்ட நிலையில் இருப்பது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. மத்திய பிரதேச மாநில சாலைகளில் வலம்வரும் இந்த மாருதி ஆல்டோ 800 மாடலை ஓமியோபதி மருத்துவரான சுஷில் சாகர் பயன்படுத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சுட்டெரிக்கும் கோடை வெயில் காலத்தில் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க இவர் கார் முழுக்க மாட்டு சாணத்தை பூசியிருக்கிறார்.

    ஏற்கனவே இதேபோன்று பல சமயங்களில் மக்கள் தங்களின் கார் முழுக்க மாட்டு சாணம் பூசிய சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. முன்னதாக கடந்த ஆண்டு கோடை காலத்தில் மாருதி ஆம்னி காரில் அதன் உரிமையாளர் மாட்டு சாணம் பூசினார். இதுதவிர 2019 மே மாத வாக்கில் டொயோட்டா கொரோல்லா மாடலில் இதே போன்ற செயலை அதன் உரிமையாளர் செய்தார்.

     

    காரின் மின்விளக்குகள், பம்ப்பர் மற்றும் நம்பர் பிலேட் தவிர இதர பகுதிகள் முழுக்க மாட்டு சாணம் பூசப்பட்ட நிலையில் காட்சியளிக்கிறது. உண்மையில் காரில் மாட்டு சாணம் பூசினால், இண்டீரியர் குளிர்ச்சியாக இருக்குமா?

    மாட்டு சாணம் ஈரமாக இருக்கும் போது, காரின் உள்புறத்தில் ஓரளவுக்கு வெப்பம் குறையலாம். ஆனால், அடிக்கும் வெயிலுக்கு மாட்டு சாணம் எளிதில் காய்ந்து விடும். இவ்வாறு மாட்டும் சாணம் காய்ந்த நிலையில் இருக்கும் போது, கார் என்ஜின் வழக்கத்தைவிட அதிக சூடாகும் வாய்ப்புகள் உண்டு. மேலும் இது காரின் பெயிண்ட்-ஐ சேதப்படுத்திவிடும்.

    • பெண் எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, வைரல் ஆனது.
    • ஹெல்மட் அணியாமல் பைக்கில் சென்ற போலீசாருக்கு ரூ. 1000 அபராதம் விதிக்கப்பட்டது.

    போக்குவரத்து விதிகளை கடுமையாக பின்பற்ற செய்யும் காவல் துறையினரே, அவற்றை மீறலாமா? சிசிடிவி கேமரா மற்றும் ஆன்லைன் சல்லான் முறை போன்ற வசதிகளால், விதிமீறல் சம்பவங்கள் எளிதில் வெளிச்சத்திற்கு வந்துவிடுகின்றன. பல சம்பவங்களில் போலீசார் சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோக்களை ஆதாரமாக கொண்டு விதிமீறலில் ஈடுபடுவோருக்கு அபராதம் விதித்துள்ளனர்.

    இது போன்ற சம்பவங்களில் பொது மக்கள் மட்டுமின்றி போலீசாரும் சமயங்களில் சிக்கி இருக்கின்றனர். அந்த வரிசையில், ஹெல்மட் அணியாமல் பைக்கில் சென்ற போலீசாருக்கு ரூ. 1000 அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறி இருக்கிறது. இந்த சம்பவம் உத்திர பிரதேச மாநிலத்தின் காசியாபாத் நகரில் அரங்கேறி இருக்கிறது.

     

    சம்பவம் பற்றிய வீடியோ டுவிட்டர் தளத்தில் மஞ்சுள் என்பவர் பதிவிட்டுள்ளார். வீடியோவில், டிவிஎஸ் அபாச்சி ஆர்டிஆர் பைக்கில் இரண்டு போலீசார் பயணிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும் போலீசார் ஹெல்மட் அணியாமல் செல்கின்றனர். காவல் துறை சீருடையில் பயணம் செய்வதோடு, விதிமீறலில் ஈடுபட்ட போலீசாரிடம், மற்றொரு வாகனத்தில் வந்த பெண் ஒருவர் சட்டம் உங்களுக்கு பொருந்தாதா என்று கேள்வி எழுப்புகிறார்.

    இதனை பெண் ஓட்டும் வாகனத்தின் பின்புறம் அமர்ந்திருந்த நபர் வீடியோ எடுத்திருக்கிறார். இதனை பார்த்த போலீசார், வீடியோ பதிவாவதை தெரிந்து கொண்டு பெண்ணிடம் எதுவும் பேசாமல், வாகனத்தை வேகமாக ஓட்டி சென்றனர். போலீசாரை துரத்தி சென்ற பெண் அவர்களை சிக்னல் ஒன்றில் வைத்து பிடித்தார். எனினும், போலீசார் அந்த பெண்ணிடம் எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

    பெண் எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, வைரல் ஆனது. இதனை பார்த்த காவல் துறை உயர் அதிகாரிகள் ஹெல்மட் அணியாமல் வாகனம் ஓட்டிய போலீசாருக்கு ரூ. 1000 அபராதம் விதித்தனர். போலீசார் மீது இதுபோன்ற நடவடிக்கைகள் ஏற்கனவே பலமுறை எடுக்கப்பட்டுள்ளன. இருசக்கர வாகனம் ஓட்டும் அனைவரும் தலைகவசம் அணிவது கட்டாயம் ஆகும். தலைகவம் அணிவதால் விபத்தின் போது வாகனம் ஒட்டுவோரின் உயிரை காக்கும்.

    • டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சான் EV மாடல் இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    • நெக்சான் EV மாடல் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவத்தில் டாடா மோட்டார்ஸ் பதில் அளித்துள்ளது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சான் EV மாடல் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தின் பூனேவில் நெக்சான் EV தீப்பிடித்தது. இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்தே நெக்சான் EV மாடல் விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    இந்த நிலையில், கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் குறித்து டாடா மோட்டார்ஸ் அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதன்படி கார் தீப்பிடித்து எரிய வாகனத்தில் ஏற்பட்ட மின் கசிவு தான் காரணம் என டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. நெக்சான் EV மாடலை அங்கீகரிக்கப்படாத சர்வீஸ் மையத்தில் சரிபார்த்ததால் தான் தீ விபத்து ஏற்பட்டது என்றும் தெரிவித்து இருக்கிறது.

     

    காரில் திடீரென தீப்பிடித்து எரிந்த நிலையிலும், காரில் பயணம் செய்தவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி பத்திரமாக மீட்கப்பட்டனர் என கூறப்படுகிறது. கார் தீப்பிடித்து எரியும் முன்பாக அங்கீகரிக்கப்படாத சர்வீஸ் மையத்தில் சர்வீஸ் செய்யப்பட்டது என கூறப்படுகிறது.

    அதன்படி நெக்சான் EV மாடலில் ஹெட்லைட் மாற்ற அங்கீகரிக்கப்படாத சர்வீஸ் மையத்தில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. சம்மந்தப்பட்ட சர்வீஸ் மையம் சார்பில் காரின் ஹெட்லைட்டை மாற்றிய போது தரமற்ற பொருட்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாகவே காரில் தீவிபத்து ஏற்பட்டது.

    நெக்சான் EV மாடலில் தீவிபித்து ஏற்பட்டதை அடுத்து வாடிக்கையாளர்கள் தங்களின் வாகனங்களை டாடா மோட்டார்ஸ்-இன் அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் செண்டர்கள் மற்றும் டச்பாயிண்ட்களில் மட்டும் சரி செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கிறது.

    Photo Courtesy: @thatsilvercity

    • ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் விடா V1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
    • புதிய விடா V1 மாடல் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 165 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்குகிறது.

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் விடா V1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது. விரைவில் விடா V1 இ ஸ்கூட்டர் முதல் மற்றும் இரண்டாம் தர நகரங்களில் விற்பனைக்கு வர இருக்கிறது. சென்னை அஞ்சல் குறியீட்டிற்கு விடா V1 மாடலை ப்ளிப்கார்ட் தளத்தில் தேடும் போது தற்போதைக்கு வினியோகம் செய்யப்படாது என்றே குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    இந்திய சந்தையில் விடா V1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பிளஸ் மற்றும் ப்ரோ என்று இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றில் முறையே 3.44 கிலோவாட் ஹவர் மற்றும் 3.94 கிலோவாட் ஹவர் என இருவித பேட்டரிகள் வழங்கப்பட்டுள்ளன. இவை முறையே 143 கிலோமீட்டர் மற்றும் 165 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்குகின்றன.

     

    புதிய விடா V1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் கழற்றக்கூடிய பேட்டரிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஸ்கூட்டரின் இரண்டு வேரியண்ட்களில் ப்ரோ வேரியண்ட் விலை அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதோடு, நீண்ட ரேஞ்ச், சிறப்பான அக்செல்லரேஷன் மற்றும் அதிக நிற ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது.

    விடா V1 பிளஸ் மாடல் மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தை 3.4 நொடிகளிலும், ப்ரோ மாடல் மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தை 3.2 நொடிகளிலும் எட்டிவிடுகிறது. ஹீரோ நிறுவனத்தின் விடா V1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒலா S1 ப்ரோ, ஏத்தர் 450X, பஜாஜ் செட்டக் மற்றும் டிவிஎஸ் ஐகியூப் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    இது மட்டுமின்றி விடா V1 ஸ்கூட்டருக்கு போட்டியாக உள்ள எந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரிலும் கழற்றக்கூடிய பேட்டரி வசதியோ, இவற்றின் விற்பனை ஆன்லைன் விற்பனை தளங்களிலோ நடைபெறுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • மெர்சிடிஸ் மேபேக் பிராண்டின் முற்றிலும் புதிய எலெக்ட்ரிக் கார் மாடல் 649 ஹெச்பி பவர் வெளிப்படுத்துகிறது.
    • இது மேபேக் பிராண்டிங்கில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் முதல் எலெக்ட்ரிக் கார் ஆகும்.

    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது மெர்சிடிஸ் மேபேக் EQS 680 எஸ்யுவி மாடலை அறிமுகம் செய்தது. இது மேபேக் பிராண்டிங்கில் அறிமுகமாகி இருக்கும் முதல் எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் ஆகும். தோற்றத்தில் புதிய மேபேக் EQS 680 மாடல் அதன் ஸ்டாண்டர்டு மாடலை போன்றே காட்சியளிக்கிறது. எனினும், இந்த எஸ்யுவி விசேஷ பெயிண்ட் உடன் கிடைக்கிறது.

    இதன் இண்டீரியர் அதிக விலை உயர்ந்ததாகவும், இதில் மிகவும் சக்திவாய்ந்த எலெக்ட்ரிக் மோட்டார்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக புதிய மேபேக் EQS 680 மாடல் அதிவேக EQS எஸ்யுவி என்ற பெருமையை பெற்று இருக்கிறது. புதிய மெர்சிடிஸ் மேபேக் EQS 680 மாடல்- ஹைடெக் சில்வர் / அப்சிடியன் பிளாக், ஹைடெக் சில்வர் / நாட்டிக்கல் புளூ, அப்சிடியன் பிளாக் / செலனைட் கிரே, அப்சிடியன் பிளாக் / கலஹாரி கோல்டு மற்றும் வெல்வட் பிரவுன் / ஆனிக்ஸ் பிளாக் என ஐந்து விதமான டூயல் டோன் நிறங்களில் கிடைக்கிறது.

     

    பொனெட்டில் மெர்சிடிஸ் லோகோ இடம்பெற்று இருக்கிறது. இதன் நோஸ் பகுதியில் பிளாக் பேனல் மற்றும் க்ரோம் பிளேட் செய்யப்பட்ட ஸ்ட்ரிப்கள் உள்ளன. இதன் ஜன்னல் பகுதிகளில் க்ரோம் சரவுண்ட்கள், டி-பில்லரில் மேபேக் லோகோ உள்ளது. இந்த எஸ்யுவியை பயனர்கள் 21 இன்ச் அல்லது 22 இன்ச் என இருவித வீல் அமைப்புகளில் பெற்றுக் கொள்ளலாம்.

    காரின் உள்புறம் மூன்று ஸ்கிரீன்கள் கொண்ட 'MBUX ஹைப்பர்ஸ்கிரீன்' இன்ஃபோடெயின்மெண்ட் பேக்கேஜ் வழங்கப்பட்டு இருக்கிறது. எனினும், இது மேபேக் சார்ந்த கஸ்டமைசேஷனுடன் தீம் மற்றும் நிறங்களை கொண்டிருக்கிறது. ஸ்டாண்டர்டு அம்சமாக இந்த காரின் பின்புறம் வெண்டிலேஷன், மசாஜ், கழுத்து மற்றும் தோள்பட்டைகளில் ஹீடிங் வசதி வழங்கும் எக்சிக்யூடிவ் சீட்கள் உள்ளன.

     

    இத்துடன் இரண்டு 11.6 இன்ச் அளவு கொண்ட டிஸ்ப்ளேக்கள், பின்புறம் MBUX டேப்லெட், MBUX இண்டீரியர் அசிஸ்ட் வழங்கப்படுகிறது. மேலும் இரண்டு கிளைமேட் கண்ட்ரோல் கப் ஹோல்டர்கள், ரிடிசைன் செய்யப்பட்ட செண்டர் கன்சோல் எக்ஸ்டென்ஷன், கூலிங் கம்பார்ட்மெண்ட் மற்றும் சில்வர் பிளேட் ஷேம்பெயின் கோப்பைகள் உள்ளன.

    புதிய மெர்சிடிஸ் மேபேக் EQS எஸ்யுவி மாடலில் ஆக்டிவ் ஆம்பியண்ட் லைட்டிங் வசதி வழங்கப்படுகிறது. இதில் 253 எல்இடிக்களை தனித்தனியே, 64 வித்தியாசமான நிறங்களில் இயக்கும் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் ஏர் பேலன்ஸ் ஃபிராக்ரன்ஸ் பேக்கேஜ் மற்றும் பர்மெஸ்டர் 4டி சரவுண்ட் சவுண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.

     

    மெர்சிடிஸ் மேபேக் EQS 680 மாடலில் 649 ஹெச்பி பவர், 950 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் சக்திவாய்ந்த எலெக்ட்ரிக் மோட்டார்கள் உள்ளன. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 4.4 நொடிகளில் எட்டிவிடும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 210 கிலோமீட்டர்கள் என்று கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடலில் 108 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் உள்ளது.

    இந்த காரை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 600 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. இத்துடன் 22 கிலோவாட் ஆன்போர்டு ஏசி சார்ஜர் வழங்கப்படுகிறது. இது காரை 6 மணி 15 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்துவிடும். இத்துடன் 200 கிலோவாட் டிசி ஃபாஸ்ட் சார்ஜர் கொண்டும் சார்ஜ் செய்யலாம். இதை கொண்டு காரை 15 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 220 கிலோமீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும். 

    • சொந்தமாக ரோபோ டாக்சி உருவாக்கும் திட்டத்தின் அங்கமாக இந்த கான்செப்ட் கார் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
    • டிடி நியூரான் கான்செப்ட் கார் ஓட்டுனர் இருக்கையை முழுமையாக அகற்றிவிட்டு, பயணிகளுக்கு அதிக இடவசதியை வழங்குகிறது.

    சீனாவை சேர்ந்த டிடி குளோபல் நிறுவனம் தனது ரோபோ டாக்சி கான்செப்ட் கார் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. டிடி நியூரான் என்று அழைக்கப்படும் புதிய கான்செப்ட் கார் விர்ச்சுவல் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கான்செப்ட் கார் எதிர்கால போக்குவரத்தில் பயனர் அனுபவத்தை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    டிடி ஆட்டோனோமஸ் டிரைவிங் தலைமை நிர்வாக அதிகாரி மெங் சிங் புதிய கான்செப்ட் வாகனத்தை அறிமுகம் செய்தார். புளூ மற்றும் வைட் நிறங்களை கொண்டிருக்கும் ரோபோ டாக்சி சீனாவில் இயங்கி வரும் உள்ளூர் ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் கூட்டணி அமைத்து உற்பத்தி செய்யப்பட இருக்கிறது.

     

     

    டிடி குளோபல் நிறுவனத்தின் நீண்ட நாள் இலக்கு, சொந்தமாக ரோபோ டாக்சி உருவாக்கும் திட்டத்தின் அங்கமாக இந்த கான்செப்ட் கார் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் 2025 வாக்கில் தானியங்கி வாகனங்களை டிடி நெட்வொர்க்கில் பயன்பாட்டிற்கு கொண்டுவர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    "இவை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் என்று நம்புகிறோம். பாகங்களின் உற்பத்தியை கட்டுப்படுத்தி, அதிகபட்சம் இந்த வாகனத்திற்கான 90 சதவீத பாகங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய முடியும் என்று நம்புகிறோம்," என மெங் சிங் தெரிவித்து இருக்கிறார்.

    டிடி நியூரான் கான்செப்ட் கார் ஓட்டுனர் இருக்கையை முழுமையாக அகற்றிவிட்டு, பயணிகளுக்கு அதிக இடவசதியை வழங்குகிறது. இந்த காரின் மிகமுக்கிய அம்சமாக இதில் உள்ள ரோபோடிக் கைகள் உள்ளன. இவை பயணிகளுக்கு மிகவும் சவுகரியமாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் டிடி குளோபல் நிறுவனம் லிடார் சென்சார் மற்றும் கார் கம்ப்யுடிங் சாதனத்தை அறிமுகம் செய்தது.

    இவை தானியங்கி டிரைவிங் தொழில்நுட்பத்தில் டிடி நிறுவனம் ஏற்படுத்தி இருக்கும் பணிகளை விளக்கும் வகையிலும், சவால்களை எந்த அளவுக்கு எதிர்கொள்ளும் என்பது பற்றிய விளக்கமும் இடம்பெற்று இருந்தது. 2016 ஆம் ஆண்டு வாக்கில் டிடி நிறுவனம் தானியங்கி வாகனங்களை உருவாக்கும் பணிகளை துவங்கியது.

    • கியா நிறுவனத்தின் கரென்ஸ் எம்பிவி மாடல் விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    • கரென்ஸ் எம்பிவி மாடல் வித்தியாசமான டிசைன் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.

    கியா நிறுவனம் முற்றிலும் எலெக்ட்ரிக் திறன் கொண்டு இயங்கும் கரென்ஸ் எம்பிவி மாடலை உருவாக்கும் பணிகளை துவங்கி இருக்கிறது. முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில், தென் கொரிய நாட்டில் சோதனை செய்யப்படும் கியா கரென்ஸ் மாடலின் ஸ்பை படங்கள் வெளியாகி உள்ளன. புதிய கரென்ஸ் எம்பிவி மாடல் கிரெட்டா EV வெர்ஷனை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் என தெரிகிறது.

    கரென்ஸ் எம்பிவி எலெக்ட்ரிக் மாடல் ப்ரோடோடைப் சோதனை செய்யப்படும் படங்கள் வெளியாகி இருப்பது இதுவே முதல்முறை ஆகும். கரென்ஸ் EV மாடல் தோற்றத்தில் தற்போது இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படு வரும் கரென்ஸ் எம்பிவி போன்றே காட்சியளிக்கும் என தெரிகிறது. எலெக்ட்ரிக் ப்ரோடோடைப் என்பதால், இந்த மாடலில் ஏரோ-ஆப்டிமைஸ் செய்யப்பட்ட வீல்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

     

    முழுமையான எலெக்ட்ரிக் கியா கரென்ஸ் மாடல் முற்றிலும் பிரத்யகேமான எலெக்ட்ரிக் வாகன டிசைன் அம்சங்களான அலாய் வீல்கள் மற்றும் இதர ஸ்டைலிங் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கலாம். கரென்ஸ் EV மாடலின் பேட்டரி மற்றும் பவர்டிரெயின் பற்றிய விவரங்கள் மர்மமாகவே உள்ளன. எனினும், இந்த கார் கிரெட்டா EV மாடலை தழுவி உருவாக்கப்படும் என தெரிகிறது.

    சமீபத்தில் இந்தியாவில் டெஸ்டிங் செய்யப்பட்ட கிரெட்டா EV மாடல் 2025 வாக்கில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கரென்ஸ் எம்பிவி மாடல் ஏற்கனவே இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில், கரென்ஸ் EV மாடலும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம். இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கரென்ஸ் மாடல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

    Photo Courtesy: newcarscoops

    ×