Logo
சென்னை 19-06-2013 (புதன்கிழமை)
  • புதுக்கோட்டை அருகே ஷேர் ஆட்டோ மீது பஸ் மோதல்: பள்ளிக் குழந்தைகள் 7 பேர் பலி
  • மருத்துவ படிப்புக்கான பொது பிரிவு கலந்தாய்வு தொடங்கியது
  • பீகார் சட்டப்பேரவையில் இன்று நிதீஷ்குமார் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு
  • தி.நகர்: இயக்குநர் மணிரத்னத்திற்கு சொந்தமான கிடங்கில் தீ விபத்து
  • காங்கிரஸ் உயர்நிலை குழு இன்று கூடுகிறது
  • வட மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு: சாவு எண்ணிக்கை 131 ஆக உயர்வு
  • ராமேஸ்வரத்தில் பலத்த காற்று: மீனவர்கள் இன்றும் கடலுக்கு செல்லவில்லை
  • சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் இன்று யாழ்ப்பானம் நீதிமன்றத்தில் ஆஜர்
கூடங்குளத்தில் இருந்து அடுத்த ஆண்டு தான் மின்சாரம் கிடைக்கும்: கரூரில் விஜயகாந்த் பேச்சு
கரூர், ஆக.17-
 
தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் தனது பிறந்த நாளை முன்னிட்டு மக்களுக்காக மக்கள் பணி என்ற திட்டம் தொடங்கி  உள்ளார். அதன்படி தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டமாக  ஏழை, எளியவர்களுக்கு  நலத்திட்ட உதவிகள்  வழங்கி வருகிறார். அதன்படி நேற்று மாலை கரூர் 80- அடி ரோட்டில் தே.மு.தி.க. சார்பில் கால்நடைகளுக்கு தேவையான  நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
 
இந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் என்.எஸ்.கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.பிரேமலதா விஜயகாந்த் சிறப்புரையாற்றினார். இந்த கூட்டத்தில்  தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் கரூர் மாவட்டத்தில் உள்ள சுமார் 500 பேர்களுக்கு  ரூ.20 லட்சம் மதிப்பிலான கால் நடைகளுக்கு தேவையான  நலத்திட்ட உதவிகளைவழங்கி சிறப்புரையாற்றினார்.
 
அப்போது அவர் கூறியதாவது:-
 
சுதந்திர தின விழாவில் பேசிய முதல்வர்  ஜெயலலிதா ஏற்கனவே சொன்ன திட்டங்களை மீண்டும் அறிக்கை கலவையாக  கூறி உள்ளார். கரூர் என்றால் ஜவுளி, பஸ் பாடி, கொசுவலை நினைவுக்கு வரும். அடுத்து நினைவுக்கு வருவது மணல். கடந்த ஆட்சியை போல் இந்த ஆட்சியிலும் மணல் கொள்ளை நடக்கிறது. தமிழகத்தில் இருந்து கடத்தப்படும் மணல் கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கு செல்கிறது. ஆனால் அங்கு இருந்து தண்ணீர் மட்டும் கிடைக்கவில்லை. கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து  விரையில் மின்சாரம் பெறப்படும் என்று முதல்வரும், வரும் 25-ந்தேதியிலிருந்து மின்சாரம் கிடைக்கும் என்று மத்திய அமைச்சர் நாராணசாமியும்  கூறுகின்றனர்.
 
ஆனால் கூடங்குளத்திலிருந்து அடுத்த ஆண்டுதான் நமக்கு மின்சாரம் கிடைக்கும்.
 
இவ்வாறு விஜயகாந்த் பேசினார். 

O
P
E
N

close

அண்மை - மாநிலச்செய்திகள்

section1

கோவில்பட்டி அருகே மயில்கள் மர்ம சாவு

கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் உள்ள கல்லூரி வளாகம் மற்றும் சுற்றுப்பகுதியில் சுமார் 25-க்கும் மேற்பட்ட மயில்கள் ....»

Recommendations
Recent Activity