கார் ஏற்றி ஏட்டு கொலை: சப்-இன்ஸ்பெக்டர்கள், 32 போலீசார் மாற்றம்- சூப்பிரண்டு அதிரடி நடவடிக்கை
பதிவு செய்த நாள் :
ஞாயிற்றுக்கிழமை,
ஜூலை 22,
12:59 PM IST
1
கருத்துக்கள்
கொள்ளிடம்,ஜூலை.22-
சீர்காழி அருகே மது விலக்கு போலீசார் சோதனையின்போது ஏட்டு ரவிச்சந்திரன் கார் ஏற்றி கொல்லப்பட்டார். இந்த சம்பவம் போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொலை வழக்கு பதிவு செய்து கார் டிரைவர் உள்பட சிலரை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் கொள்ளிடம் அருகே உள்ள ஆனைக்கார சத்திரம் மற்றும் புதுப்பட் டினம் போலீஸ் நிலையங்களில் உள்ள சப்- இன்ஸ்பெக்டர்கள் உள்பட 32 பேர் அதிரடியாக திருவாரூர், வாய்மேடு, நாகை உள்ளிட்ட இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆனைக்கார சத்திரத் தில் 17 பேரும், புதுப்பட்டினத்தில் 15 பேர் மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை போலீஸ் சூப்பிரண்டு ராமர் பிறப்பித்துள்ளார்.
போலீஸ் சூப்பிரண்டின் அதிரடி மாற்ற உத்தரவால் போலீசார் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மாறுதல் செய்யபட்ட போலீசார் கூறுகையில் இந்த திடீர் உத்தரவால் தங்கள் பிள்ளைகளின் பள்ளி படிப்பு பாதிக்கும் என்று மனக் குமுறல்களை வெளிப்படுத்தினர்.
close
மயிலாடுதுறை எம்.எல்.ஏ.அருட்செல்வன் ஆத்துக்குடி ஊராட்சியில் மக்கள் குறை கேட்கச் சென்றார்.
அப்பகுதி பெண்கள் ஒன்று கூடினர். அவர்களிடம் ....»
மேலும் நாகப்பட்டினம் செய்திகள்
1
கருத்துக்கள்