Logo
சென்னை 24-05-2013 (வெள்ளிக்கிழமை)
  • காஞ்சிபுரம் அருகே தனியார் பார்சல் லாரியில் தீ: சென்னை - பெங்களூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு
  • மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து: மத்திய மந்திரி சபை ஒப்புதல்
  • மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இன்று மறியல் போராட்டம்
  • ஆசிரியர்கள் பதவி உயர்வு கவுன்சிலிங் தள்ளிவைப்பு
  • 17 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை நீர்மட்டம் 19 அடியாக குறைந்தது
  • சி.பா. ஆதித்தனாரின் 32-வது நினைவு நாள்: சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை
  • இலங்கை சிறையிலிருந்து விடுதலையான 26 தமிழக மீனவர்கள் சொந்த ஊர் திரும்பினர்
  • மதுரையில் அரசு அதிகாரி மீது பாலியல் குற்றச்சாட்டு: பெண் புகார்
நர்சு தற்கொலை முயற்சி: ஆஸ்பத்திரி ஊழியர்கள் மறியல்-49 பேர் கைது
காஞ்சீபுரம்,ஜூலை. 20-
 
காஞ்சீபுரம் சி.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் நிர்வாகத்தினருக்கும், ஊழியர்களுக்கும் இடையே சில மாதங்களாக பிரச்சினை இருந்து வருகிறது.இந்நிலையில் நிர்வாகத்தில் உள்ள ஒருவர் நர்சாக பணிபுரியும் ஜாக்குலின் ஜானட் என்பவருக்கு நெருக்கடி கொடுத்து மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
 
இதனால் மனவேதனை அடைந்த ஜாக்குலின் நேற்று முன்தினம் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு வேறொரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில் ஆஸ்பத்திரியில் ஊழியர் ஒருவர் ஏற்படுத்திய மனஉளைச்சலினால் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று குறிப்பிட்டு இருந்தார்.
 
இதற்கிடையே நர்சு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து அறிந்ததும் ஆஸ்பத்திரியில் பணிபுரியும் நர்சுகள், ஊழியர்கள் மற்றும் ஜாக்குலினின் உறவினர்கள் ஆஸ்பத்திரி முன்பு சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
 
தகவல் அறிந்ததும் சிவகாஞ்சி போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட 24 பெண்கள் உள்பட 49 பேரை கைது செய்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

O
P
E
N

close

அண்மை - காஞ்சிபுரம்

section1

பிளஸ்-2 மாணவி மாயம்

காஞ்சீபுரம் மாவட்டம் கொளப்பாக்கம் பள்ளிக்கூடத் தெருவில் வசிப்பவர் கிருஷ்ணாராவ். இவரது மகள் ரஞ்சிதா (வயது 16). ....»

Recommendations
Recent Activity