Logo
சென்னை 22-05-2013 (புதன்கிழமை)
மோடி ஒரு அரசியல் தீவிரவாதி: காங்கிரஸ் பாய்ச்சல்
சூரத்,ஜூன்.10-
 
குஜராத் மாநில பா.ஜ.க செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி, காங்கிரஸ் மீது கடும் தாக்குதல் தொடுத்தார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் பொதுமக்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும், ஊழல் மற்றும் விலைவாசி அதிகரித்துள்ளதாகவும் அவர் விமர்சித்தார். மேலும் காங்கிரஸ் கப்பல் மூழ்கிக் கொண்டிருக்கிறது எனவும் கூறினார்.
 
இந்நிலையில் சூரத் நகரில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த அம்மாநில காங்கிரஸ் தலைவர் அர்ஜுன் மோத்வாடியாவிடம், மோடியின் பேச்சு குறித்து நிருபர்கள் கேட்டனர்.
 
அதற்கு அர்ஜுன் மோத்வாடியா பதில் அளிக்கையில், மோடி ஒரு அரசியல் தீவிரவாதி. அவர் தனது பரம எதிரியான சஞ்சய் ஜோஷியைக் கண்டு பயப்படுகிறார். அவர் பா.ஜனதா மேலிடத்துக்கு நெருக்கடி கொடுத்து ஜோஷியை வெளியேற்றியதற்கு அதுவே காரணம் என்று தெரிவித்தார்.

O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

மேற்கு வங்கத்தில் 'ஆன்லைன்' லாட்டரிக்கு தடை: மம்தா உத்தரவு

இணையதளங்களின் மூலம் விற்பனை செய்யப்படும் 'ஆன்லைன்' லாட்டரிகளுக்கு மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி தடை ....»

Recommendations
Recent Activity