Recommendations
Recent Activity
தேசிய பயங்கரவாத தடுப்பு மையத்துக்கு மாநிலங்களின் ஒப்புதல் அவசியம்: சி.பி.தாகூர்
பாட்னா,பிப்.18-
 
பீகார் பா.ஜ.க. தலைவர் சி.பி.தாகூர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் போன்றவை தற்போதைய சூழலுக்கு மிக முக்கியமானதாகும்.  ஆனால் இதுபோன்ற அமைப்புகள் அமைப்பதற்கு முன் மாநில அரசுகளிடம் கலந்தாலோசிக்க வேண்டும்.
 
ஐக்கிய அமைப்பு கொண்ட இந்தியாவில் தேசிய பயங்கரவாத தடுப்பு மையம்  மாநில அரசுகளின் ஒப்புதல் அவசியமானதாகும் என கூரியுள்ளார். இதே கருத்தை ஐக்கிய ஜனதா தள செய்தித்தொடர்பாளர் சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.