மேலும் திருநெல்வேலி செய்திகள்
Recommendations
Recent Activity
Stories Tag Cloud
Search Tag Cloud
அணுமின் நிலையம் பணி இடிந்தகரை வாலிபர் போராட்ட குழு தாக்குதல், அணுமின்நிலையம், அத்தியூத்து சாலை கிணறு விபத்து அரசு, அதிகாரி பேச்சுவார்த்தை கூடங்குளம் போராட்டக்குழு, அம்பை கடன் பெண் பணம் மோசடி ஆலங்குளம் பெண் கைது, அரசுடன் பேச்சுவார்த்தை நீதிபதி ஏ.பி.ஷா நால்வர் குழு கூடங்குளம் போராட்டக்குழு அறிவிப்பு, ஆலங்குளம், ஆலங்குளம் குளம் குத்தகை தொடர் மோதல் அரிவாள் வெட்டு, ஆலங்குளம் டெங்கு காய்ச்சல் அம்மன் பொங்கல் வழிபாடு, ஆலங்குளம் மினி பஸ் மோதி கல்குவாரி தொழிலாளி சாவு, இடிந்தகரை அணு உலை போராட்டம் வெற்றி சீமான், இடிந்தகரை பொதுமக்கள் ஊர்வலம் உதயகுமார், இருவர், சங்கரன்கோவில், நெல்லை
சங்கரன்கோவில் பிரச்சினை: நெல்லையில் 3 இடங்களில் மறியல் போராட்டம்
நெல்லை, பிப். 8-

சங்கரன்கோவிலில் இரு தரப்பினர்களுக்கிடையே நடந்த மோதல் தொடர்பாக நெல்லையில் உள்ள மேலப்பாளையம், பேட்டை, தாழையூத்து ஆகிய 3 இடங்களில் நேற்று நள்ளிரவு மறியல் போராட்டம் நடந்தது. மேலப்பாளையத்தில் மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த ரசூல்மைதீன் தலைமையில் சந்தை முக்கில் திடீர் மறியல் போராட்டம் நடந்தது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று அவர்களை சமரசம் செய்து போக்கு வரத்தை சீர் செய்தனர். இது போல பேட்டை ரொட்டிக்கடை பஜார் முன்பு மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த ஜெய்லானி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தாழையூத்து பஜாரிலும் மனித நேய மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து மாநகர போலீஸ் கமிஷனர் கருணாசாகர் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் ஜெயபாலன் மேற்பார்வையில் மேலப்பாளையம், பேட்டை பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது.

இந்த பகுதியில் உள்ள பள்ளி வாசல்கள், மசூதிகளிலும், முக்கிய இந்து கோவில்களிலும் பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலப்பாளையம் பேட்டை பகுதிகளில் போலீஸ் ரோந்து பணியும் தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.