கோவில் நிலத்தை மீட்ககோரி 4 ஆயிரம் பக்தர்கள்
பால்குட ஊர்வலம்
Erode
வெள்ளிக்கிழமை,
பெப்ரவரி 03,
4:50 PM IST
0
கருத்துக்கள்
ஈரோடு, பிப். 3-
ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் நிலத்தை மீட்க வேண்டும். பன்னீர்செல்வம் மேம்பால திட்டத்தை கைவிட வேண்டும், 80 அடி சாலை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி பெரிய மாரியம்மன் கோவில் நில மீட்பு இயக்கம் சார்பில் ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு இருந்து இன்று பால்குட ஊர்வலம் நடந்தது.
இதில் சுமார் 4 ஆயிரம் பெண் பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். திருவேங்கடசாமி வீதி, பிரப்ரோடு வழியாக வந்த இந்த ஊர்வலம் பெரிய மாரியம்மன் கோவிலை அடைந்தது. அங்கு வரிசையில் நின்ற பக்தர்கள் அம்மனுக்கு பால்குட அபிசேகம் செய்தனர்.
பெரிய மாரியம்மன் கோவில் நில மீட்பு இயக்க தலைவர் சந்திரசேகர் தலைமையில் நடந்த இந்த ஊர்வலத்தில் திட்டக்குழு தலைவர் சந்திரசேகர், துணை தலைவர் கைலாச பதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
4 ஆயிரம் பக்தர்கள் பால்குடம் ஏந்தி வந்ததையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பன்னீர்செல்வம் நேரடி மேற்பார்வையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
0
கருத்துக்கள்