மேலப்பாளையத்தில் காருக்கு தீ வைத்த கும்பல்
Tirunelveli
வியாழக்கிழமை,
பெப்ரவரி 02,
3:30 PM IST
1
கருத்துக்கள்
நெல்லை, பிப். 2-
மேலப்பாளையம் மேத்த மார்பாளையம் 2-வது தெருவை சேர்ந்தவர் அப்துல் காதர். இவர் பழைய, புதிய கார்கள் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் ஒரு பழைய கார் வாங்கினாராம். அந்த காரை தனது வீட்டு அருகே நிறுத்தியிருந்தார். இன்று அதிகாலை அந்த கார் திடீரென்று தீ பிடித்து எரிந்தது.
காரின் பின்பக்க டயர் மற்றும் பகுதிகள் எரிந்து சேதமாயின. இதை பார்த்ததும் அக்கம் பக்கத்தினர் திரண்டு தீயை அணைத்தனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் மேலப்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
காருக்கு மர்ம கும்பல் தீ வைத்திருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். அதன் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் மேலப்பாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
1
கருத்துக்கள்