Recommendations
Recent Activity
தேசிய ஊரக சுகாதார திட்ட மோசடி: சவுரப் ஜெயினின் ஜாமீன் மனு நிராகரிப்பு
காசியாபாத்(உத்தர பிரதேசம்),பிப். 2-
 
தேசிய ஊரக சுகாதார திட்ட மோசடியில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சவுரப் ஜெயினின் ஜாமீன் மனுவை சி.பி.ஐ. நீதிமன்றம் நிராகரித்தது.
 
ஜெயின் மீதான குற்றச்சாட்டுக்கள் தீவிரமாக இருப்பதாகவும் அதனால் அவர் ஜாமீன் பெற தகுதியற்றவராக உள்ளார் என்றும் சிறப்பு நீதிபதி ஏ.கே. சிங் தெரிவித்துள்ளார்.