கன்னியாகுமரி, பிப். 1-
கன்னியாகுமரி கடலில் இன்று சூறைக்காற்றும், அலைகளின் சீற்றமும் காணப்பட்டது.
திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறைக்கு இன்று காலை 8 மணிக்கு வழக்கம்போல் படகு போக்குவரத்து தொடங்கியது. நேரம் செல்ல செல்ல காற்றின் வேகம் அதிகமாக இருந்தது.
இதனால் காலை 9.30 மணிக்கு திருவள்ளுவர் சிலைக்கும், விவேகானந்தர் பாறைக்கும் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
இதனால் கன்னியா குமரிக்கு வந்த சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலையின் எழிலையும், விவேகானந்தர் மண்டபத்தையும் பார்க்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.