Recommendations
Recent Activity
Stories Tag Cloud
Search Tag Cloud
அதிமுக இளைஞர் பாசறை ஏழை மக்கள் பணி அமைச்சர் நத்தம் விசுவநாதன், இலங்கை தமிழர்கள் பிரச்சினை இந்தியா நாஞ்சில் சம்பத் பேச்சு, ஊத்து பண்ணைக்காடு பிளம்ஸ் பேரிக்காய் விற்பனை, என்ஜினீயர் வீடு, கலால்துறை கள்ளச்சாராயம் ஒழிப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி வெள்ளோடு, கலெக்டர் கடத்தல் கல்லூரி பிரார்த்தனை, கள்ளத்தொடர்பு போலீஸ் தி.மு.க. நிர்வாகி கொலை, கார், கொடைக்கானல் ஏரிச்சாலை ஆக்கிரமிப்பு அகற்றம் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை, கொடைக்கானல் கடை ரூபாய் செல்போன் கொள்ளை பூட்டு உடைப்பு, கொடைக்கானல் கோடை விழா தொடக்கம், கொடைக்கானல் கோடை விழா மலர் கண்காட்சி, கொலை, கோவில் திருவிழா அண்ணன் தம்பி கண்மாயில், வத்தலக்குண்டு
பழனி ஸ்ரீசுப்ரமண்யா பொறியியல் கல்லூரியில் வாழும் கலை பயிற்சி மற்றும் மரம் நடும்விழா
பழனி, ஜன.29-

பழனி ஸ்ரீசுப்ரமண்யா பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரியின் சார்பாகவும் வாழும் கலைபயிற்சி இயக்கத்தின் சார்பாகவும் கல்லூரியில் உள்ள விவேகானந்தர் கலையரங்கத்தில் வாழும் கலைப்பயிற்சி, மரம் நடும் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு கல்லூரியின் துணைத்தலைவர் பாபுராஜ் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

முன்னதாக கல்லூரியின் முதல்வர் ராஜப்பன் வரவேற்றார். கல்லூரியின் அறங்காவலர் சந்திரன், ஆலோசகர் இம்மானுவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாழும் கலைபயிற்சி விழாவில் சிறப்பு விருந்தின ராக பெங்களூர் வாழும் கலைப்பயிற்சி இயக்கத்தின் முதன்மை குரு ஞானதேவ்ஜி கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பல பயனுள்ள கருத்துக்களையும், மர வளர்ப்பதன் அவசி யத்தையும், மரம் வளப்பதன் மூலமாக மனித குலத்திற்கு தேவைப்படும் பயன்களை படக்காட்சியின் மூலமாக எடுத்து கூறினார். மாணவ, மாணவிகள் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதைபோல் நாம் வாழும் சமுதாயத்திற்கும் சேவை செய்ய வேண்டு மெனவும், மாணவ, மாணவிகள் தினந்தோறும் இருபது நிமிடங்களாவது மரம் வளர்க்க நேரம் ஒதுக்க வேண்டுமென்றும், முன்னேறிய நாடுகள் இயற்கை சூழலுக்கு முக்கியத்துவம் அளிப்பதைப்போல் நாமும், நம்முடைய சமுதாயமும் இயற்கை வளத்தை பாதுகாக்க வேண்டுமெனவும் எடுத்து கூறினார்.

மேலும் மாணவ, மாணவி களிடையே நாம் வாழும் உலகத்தில் நிலம், நீர் காற்று ஆகியவை மாசுபடுவதை தடுக்க நாம் என்ன நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதை விழிப் புணர்வு கேள்வி பதில் மூலமாகவும் ஒலி-ஒளி காட்சிகள் மூலமாகவும் மாணவ, மாணவிகளுக்கு எடுத்து கூறினார். முடிவில் கல்லூரியின் ஆலோசகர் இம்மானுவேல் நன்றி கூறினார்.