Recommendations
Recent Activity
Stories Tag Cloud
Search Tag Cloud
அணுஉலை போராட்டம் அதிமுக திமுக இடிந்தகரை சீமான், அணுமின்நிலையம், அத்தியூத்து சாலை கிணறு விபத்து அரசு, அதிகாரி பேச்சுவார்த்தை கூடங்குளம் போராட்டக்குழு, அம்பை, அம்பை கடன் பெண் பணம் மோசடி ஆலங்குளம் பெண் கைது, அரசுடன் பேச்சுவார்த்தை நீதிபதி ஏ.பி.ஷா நால்வர் குழு கூடங்குளம் போராட்டக்குழு அறிவிப்பு, அருவி நீரோடைகள் களக்காடு புலிகள் காப்பகம் பரிசீலனை வனத்துறை அதிகாரி தகவல், ஆய்வு ரஷ்ய குழு வருகை கூடங்குளம் உதயகுமார் குற்றச்சாட்டு, ஆலங்குளம், ஆலங்குளம் குளம் குத்தகை தொடர் மோதல் அரிவாள் வெட்டு, ஆலங்குளம் மினி பஸ் மோதி கல்குவாரி தொழிலாளி சாவு, இடிந்தகரை அணு உலை போராட்டம் வெற்றி சீமான், இடிந்தகரை பொதுமக்கள் ஊர்வலம் உதயகுமார், விபத்து
பாவூர்சத்திரம் அருகே முட்புதரில் கிடந்த குழந்தை மீட்பு
பாவூர்சத்திரம், ஜன. 13-

நெல்லை- தென்காசி மெயின்ரோட்டில் அடைக்கலப்பட்டினம் அருகே ரோட்டோரம் முட்புதருக்குள் ஒரு ஆண் குழந்தை அழுதபடி கிடந்தது. பிறந்து 3 நாட்களே ஆன அந்த குழந்தை துணியில் சுற்றி வீசப்பட்டிருந்தது. அப்போது அந்த வழியே பாவூர்சத்திரம் அருகே உள்ள நாட்டார்பட்டியை சேர்ந்த சத்யா (வயது28) என்பவர் குழந்தையை மீட்டு பாவூர்சத்திரம் போலீசில் ஒப்படைத்தார்.

இன்ஸ்பெக்டர் ஜமால், சப்- இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் அந்த குழந்தையை பாவூர்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை செய்து பின்னர் நெல்லை சரணாலயத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து தொட்டில் குழந்தை திட்டத்தில் அந்த குழந்தை சேர்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

குழந்தையை புதரில் வீசியவர் யார்? தவறான உறவில் பிறந்ததால் அந்த குழந்தை வீசப்பட்டதா என்பது பற்றி பாவூர்சத்திரம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.