கருணாநிதியின் ஒட்டு மொத்த
குடும்பத்தினரும் ஜெயிலுக்கு செல்வார்கள்:
அமைச்சர் கே.வி.ராமலிங்கம் பேச்சு
Erode
சனிக்கிழமை,
நவம்பர் 12,
7:00 PM IST
0
கருத்துக்கள்
ஈரோடு, நவ. 12-
ஈரோடு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கூரப்பாளையம் ஊராட்சியில் 2-வது கட்டமாக தோட்டாணி சத்திரத்தில் தமிழக அரசின் விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் விழா நடை பெற்றது.
விழாவில் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.ராம லிங்கம் கலந்து கொண்டு 223 பேருக்கு மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் மேம்பட வேண்டும் என்று திட்டங்கள் தீட்டினார். அவர் வழியில் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவும் தாழ்த்த பட்ட, அடித்தட்டு மக்களை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்ல விலையில்லா திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
ஆனால் கடந்த ஆட்சியில் தி.மு.க. தலைவர் தனது குடும்பத்தினரின் நலனை மட்டுமே பார்த்துக் கொண்டார். அதனால் தான் சிறைவாசம் அனுபவிக்கிறார்கள். கருணாநிதியின் ஒட்டு மொத்த குடும்பத்தினரும் ஜெயிலுக்கு செல்ல தயாராகி வருகிறார்கள்.
எனவே ஊழல் ஆட்சியை தூக்கி எறிந்த உங்களுக்கு நன்றியை தேரிவித்து கொள்கிறேன். தமிழக முன்னேற்றத் திற்காக பாடுபடும் ஜெயலலி தாவுக்கு உறுதுணையாக இருங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
0
கருத்துக்கள்