கார்டுகளை ஊழியர்கள் எடுத்துச் சென்றதால் பாகோடு ரேஷன்கடையை பொதுமக்கள் முற்றுகை
Kanyakumari
வியாழக்கிழமை,
நவம்பர் 10,
5:52 PM IST
0
கருத்துக்கள்
மேல்புறம், நவ.10-
மார்த்தாண்டம் அருகே உள்ள பாகோடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு பாங்கி வளாகத்தில் உள்ள ரேஷன் கடையில் மொத்தம் 950 ரேஷன் கார்டுகள் உள்ளன. இவற்றில் முதலில் வரும் கார்டுகளுக்கு மட்டுமே மண்எண்ணை வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இதனால் மண்எண்ணை வினியோகிக்கும் நாளில் அங்கு பொதுமக்கள் கூட்டம் அலைமோதும். இந்த மாதம் வினியோகம் செய்வதற்கான மண்எண்ணை நேற்று இரவு வந்தது.
இதையறிந்த பொது மக்கள் மண்எண்ணை வாங்க பதிவு செய்வதற்காக 500-க்கும் மேற்பட்ட கார்டுகளை அடுக்கி வைத்தனர். இதுபற்றி அறிந்த வட்ட வழங்கல் அலுவலக ஊழியர்கள் அதிரடி சோதனை நடத்தி கார்டுகள் அனைத்தையும் எடுத்துச் சென்றனர். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
பொதுமக்கள் ரேஷன் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். வட்ட வழங்கல் அதிகாரிகள் வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து ரேஷன் கார்டுகள் பொதுமக்களிடமே திருப்பி ஒப்படைக்கப்பட்டு மண்எண்ணை வினியோகம் நடந்தது.
0
கருத்துக்கள்