Recommendations
Recent Activity
Stories Tag Cloud
Search Tag Cloud
அதிமுக இளைஞர் பாசறை ஏழை மக்கள் பணி அமைச்சர் நத்தம் விசுவநாதன், இலங்கை தமிழர்கள் பிரச்சினை இந்தியா நாஞ்சில் சம்பத் பேச்சு, ஊத்து பண்ணைக்காடு பிளம்ஸ் பேரிக்காய் விற்பனை, என்ஜினீயர் வீடு, கலால்துறை கள்ளச்சாராயம் ஒழிப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி வெள்ளோடு, கலெக்டர் கடத்தல் கல்லூரி பிரார்த்தனை, கள்ளத்தொடர்பு போலீஸ் தி.மு.க. நிர்வாகி கொலை, கார், கொடைக்கானல் ஏரிச்சாலை ஆக்கிரமிப்பு அகற்றம் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை, கொடைக்கானல் கடை ரூபாய் செல்போன் கொள்ளை பூட்டு உடைப்பு, கொடைக்கானல் கோடை விழா தொடக்கம், கொடைக்கானல் கோடை விழா மலர் கண்காட்சி, கொலை, கோவில் திருவிழா அண்ணன் தம்பி கண்மாயில், வத்தலக்குண்டு
மு.க. அழகிரியை பற்றி பேசியதால் தி.மு.க.- அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கடும் மோதல்- அடிதடி பழனி நகரசபை கூட்டத்தில் பரபரப்பு
பழனி மே, 30-
 
பழனி நகரசபை கூட்டம் அதன் தலைவர் ராஜ மாணிக்கம் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு) தலைமையில் நடைபெற்றது. இதில் தி.மு.க- அ.தி.மு.க. உள்பட அனைத்து கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.
 
கூட்டத்தில் 14-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் சக்திவேல் பேசும் போது, “தி.மு.க. தலைவர் கருணாநிதி, மு.க. ஸ்டாலின் ஆகியோரை பற்றி பேசி விட்டு மத்திய மந்திரி மு.க.அழகிரியை குறிப்பிடும் போது அஞ்சா நெஞ்சர் அழகிரி என்று குறிப் பிட்டார்.
 
இதைக் கேட்டதும் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் மு.க.அழகிரியை தான் காணவில்லையே? அவரை அஞ்சா நெஞ்சர் என்று சொல்லக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து தி.மு.க- அ.தி.மு.க. கவுன் சிலர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக உருவெடுத்தது. இரு தரப்பினரும் ஒருவரை யொருவர் அடிக்க பாய்ந்தனர்.
 
அ.தி.மு.க. கவுன்சிலர் கணேசனும், தி.மு.க. கவுன் சிலரும் ஒருவரை யொருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். மற்ற கவுன்சிலர்கள் அவர்களிடையே புகுந்து சமரசம் ஏற்படுத்தினர். அதே நேரத்தில் பெண் கவுன்சிலர்களும் மோதிக் கொண்டனர். இதனால் நகர சபை தலைவர் கூட்டத் தை பாதியிலே ஓத்தி
வைத்தார்.