தலை முடி எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும் அப்படி இல்லாவிட்டால், அது குப்பைக் கூடையாகி பின் தலையில் பொடுகு,புண்,அரிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது..
உலர்ந்த ஆரஞ்சு தோல் - 50 கிராம், வெந்தயம் -50 கிராம், பிஞ்சு கடுக்காய் - 10 கிராம், வால் மிளகு - 10 கிராம், பச்சை பயறு - கால் கிலோ... எல்லாவற்றையும் கலந்து நன்கு காய வைத்து பின் அரைத்துக் கொள்ள வேண்டும்.
இதை வாரம் இரு முறை தலையில் நன்றாகத் தேய்த்துக் குளித்து வந்தால் பொடுகு,புண்,அரிப்பு போவதுடன் தலையும் சுத்தமாகும்.மேலும் கூந்தல் வாசனையாகவும், பளபளப்பாகவும் மாறும்.
செம்பருத்தி இலை, விளாம் இலை சம அளவு எடுத்து அரைத்துத் தலைக்குக் குளிக்க, தலை முடி மூலிகை குளியல் போல மிகவும் வாசனையுடன் இருக்கும். இதை போட்டு குளித்த பிறகு எண்ணெய், சீயக்காய் எதுவும் தேவையில்லை. கூந்தலும் சுத்தமாகிவிடும்.