செங்கல்வராயன் கூட்டுறவு
சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம்: அரவைப்பணி பாதிப்பு
Villupuram
வெள்ளிக்கிழமை,
டிசம்பர் 17,
4:50 PM IST
0
கருத்துக்கள்
திருவெண்ணைநல்லூர், டிச. 17-
திருவெண்ணை நல்லூர் அருகே பெரிய செவலையில் செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. இந்த சக்கரை ஆலையில் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.
இவர்கள் தங்களுக்கு மின்வாரிய ஊழியர்களுக்கு இணையான சம்பளத்தை வழங்க வேண்டும், 6-வது ஊதியக்குழு பரிந்துரையின்படி ஊதிய விகிதத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொ.மு.ச. மன்ற தொழிற்சங்கத்தில் 3 நாள் தொடர் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்து இருந்தனர்.
அதன்படி அவர்கள் நேற்று வேலை நிறுத்தத்தை தொடங்கினர். இதில் சி.ஐ.டி.யூ., ஏ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி. உள்ளிட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்த 400க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இன்று 2-வது நாளாக அவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தினால் கரும்பு அரவை பணிகள் நடைபெறவில்லை. இதனால் சர்க்கரை உற்பத்தி பாதிக்கப்பட்டு மேலும் கரும்பு அரவை பணி நடைபெறாததால் ஆலைக்கு கரும்பு ஏற்றி வந்த ஏராளமான லாரிகள், டிராக்டர்கள் ரோட்டில் அணிவகுத்து நின்றன.
0
கருத்துக்கள்